Search This Blog

Tuesday, November 23, 2010

கார்ப்பரேட் இந்தியா..!

 மத்தியில் திமுக குடும்பத்தினருக்கு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக திமுக குடும்பத்தினருக்கு பதவி கிடைக்கக் கூடாது (காங்கிரஸ் கோஷ்டிகளைவிட திமுகவோட குடும்ப கோஷ்டி இப்ப அதிகமாயிடுச்சே) என்பதற்காக அவர்கள் செய்த தகிடு தித்தங்கள். ஆடியோ டேப்பாக இப்போது வெளிவந்திருக்கிறது. அதனை தெளிவாக தமிழ்படுத்தி உண்மைத்தமிழன் - சரவணன் இந்த இணைப்பில் http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_9136.html எழுதியிருக்கிறார். கொஞ்சம் பெரிய பதிவுதான். ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அதனால் கொஞ்சம் பொறுமையாக முழுதாகப் படியுங்கள்.
 கீழே நான் குறிப்பிட்டிருக்கும் விசயங்கள் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

1. திமுகவுக்குள் இருக்கும் குடும்பச் சண்டை.
2. குடும்பத்தில் அனைவரும் சென்று கும்மியடிக்கும் அளவு செல்வாக்கு பெற்ற முதல்வர். குடும்ப நலனிற்காக மட்டுமே மத்திய அரசை பயன்படுத்துவது.
3. மத்தியில் உண்மையில் ஆளுவது கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்களே.
4. ஊடகங்கள் (செய்தித்தாள், தொலைக்காட்சி) கைப்பாவையாக செயல்படுவது.
5. இதெல்லாம் பெரிய விசயமே இல்லை என நாம் நினைப்பது.
 

தொலைத் தொடர்புத் துறையில் மொபைல் பேசுவதிலும், இணைய இணைப்புப் பெறுவதிலும் நாம் படும் அல்லல்கள், அடையும் பண இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இந்திய அரசாங்கமே அவர்கள் கையில்.. நாம் ஒன்றும் செய்ய முடியாது.. என்று நன்கு தெரிந்ததால்.. நாம் தெரிந்தே ஏமாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நம் இந்தியா மாதிரி ஒரு ஜனநாயக நாடு உலகில் இல்லை என்று நாம் பெருமை கொள்கிறோம். ஆனால் நம் இந்தியா ஜனநாயக நாடு அல்ல. இந்தியாவை உண்மையில் ஆளுவது கார்ப்பரேட் முதலாளிகள்தான்.

நமக்கு எதுவும் முக்கியமில்லை. நமக்கு இலவசமாக எதாவது பொருள் கிடைத்தால் சரி. எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன நம்ம தலைல குண்டு விழலை என்று கண்ணி வெடியின் மீது அமர்ந்து கொண்டு நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாள் நிச்சயம் அடியில் இருக்கும் கண்ணி வெடி வெடிக்கும் அப்போது அழுவோம். அதுவரை....

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று..


Wednesday, November 17, 2010

ஆறிலிருந்து முப்பது வரை - நான் ரசித்த ரஜினி படங்கள்

ரஜினிகாந்தோட படங்கள்ல எனக்கு நிறைய படம் புடிக்கும். இந்த தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் அருண்பிரசாத்துக்கு (சுற்றுலா விரும்பி) என்னோட நன்றி. இங்க இந்த தொடர்பதிவ நிறைய பேர் எழுதிட்டதால.. எப்படியும் யாரும் படத்தோட டைட்டில மட்டும் படிச்சுட்டு மேட்டரை விட்டுடுவீங்க. அதனால என்னோட ஆறு வயசுல இருந்து இந்த 30 வயசு வரைக்கும் எனக்குப் புடிச்ச ரஜினி படத்து பேரையும் அதுல எனக்கு புடிச்ச பாட்டையும் மட்டும் இங்க நான் குறிப்பிடறேன்...


1.

வேலைக்காரன்

பாடல்கள்: வேலை இல்லாதவன்தான்...., பெத்து எடுத்தவதான்...
இசை: இளையராஜா.

ராஜா சின்ன ரோஜா

பாடல்கள்: ஒரு பண்பாடு இல்லையென்றால்..., பூ பூபோல்..., சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...
இசை: சந்திர போஸ்.

தில்லு முல்லு

பாடல்கள் எதுவும் பிடிக்காது ஆனா படத்தோட பின்னனி இசை சுறுசுறுப்பா இருக்கும் அதனால அது பிடிக்கும். இசை: எம்.எஸ்.வி


2.

பாட்ஷா
பாடல்: தங்கமகன் இன்று...
இசை: தேவா

முத்து
பாடல்கள்: ஒருவன் ஒருவன்.., விடுகதையா...
இசை: ஏ.ஆர். ரகுமான்

அண்ணாமலை

பாடல்கள்: வெற்றி நிச்சயம்...., ஒரு பெண் புறா...., ரக்ககட்டி பறக்குது...
இசை: தேவா


3.

தளபதி
பாடல்கள்: சின்னத்தாயவள்....., யமுனை ஆற்றிலே..., புத்தம் புது....
இசை: இளையராஜா.

படிக்காதவன்.

பாடல்கள்: ஜோடி கிளி எங்கே..., ஒரு கூட்டுக் கிளியாக...., ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்...
இசை: இளையராஜா..

மாப்பிள்ளை

பாடல்கள்: என்னதான் சுகமோ...., என்னோட ராசி நல்ல....
இசை: இளையராஜா

4.

படையப்பா

பாடல்கள்: வாழ்க்கையில் ஆயிரம்....
இசை: ஏ.ஆர். ரகுமான்..

(உண்மையில் முத்துவில் இந்த கூட்டணியில் பாடல்கள் மிக நன்றாக அமைந்ததால் மிகவும் எதிர்பார்ப்போடு இருந்தேன். ஏமாற்றமே...)

சந்திரமுகி

படம் மட்டும்தான் பிடிக்கும். பாடல்கள் எதுவும் பிடிக்காது.வித்யாசாகர் ரஜினி படத்திற்கு இசையமைக்க கிடைத்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார்.

உழைப்பாளி


பாடல்கள்: ஒரு மைனா மைனா...
இசை: இளையராஜா.


5.

அருணாச்சலம்

பாடல்கள்: தலை மகனே கலங்காதே...
இசை: தேவா


பில்லா

பாடல்கள்: மை நேம் இஸ் பில்லா...
இசை: எம்.எஸ்.வி

நினைத்தாலே இனிக்கும்

பாடல்கள்: எங்கேயும் எப்போதும்...
இசை: எம்.எஸ்.வி

6.

முள்ளும் மலரும்

பாடல்: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...
இசை: இளையராஜா.

இளமை ஊஞ்சலாடுகிறது

இருவருக்காகவும் பிடிக்கும் (ரஜினி, கமல்)

பாடல்: ஒரே நாள் உனை நான்....
இசை: இளையராஜா.

மிஸ்டர் பாரத்

பாடல்: காத்திருக்கேன் கதவத் தொறந்து..., என் தாயின் மீது...
இசை: இளையராஜா.

7.
தர்மத்தின் தலைவன்

பாடல்கள்: முத்தமிழ் கவியே வருக..., தென்மதுரை வைகை நதி...
இசை: இளையராஜா

குரு சிஷ்யன்

பாடல்கள்: வா வா வஞ்சி இளமானே....
இசை: இளையராஜா

மனிதன்

பாடல்கள்: வானத்தை பார்த்தேன்.., ஏதோ நடக்கிறது...
இசை: சந்திரபோஸ்

8.

நான் அடிமை இல்லை

பாடல்கள்: ஒரு ஜீவன் தான்....,
இசை: விஜய் ஆனந்த்.

நல்லவனுக்கு நல்லவன்

பாடல்கள்: சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு..., முத்தாடுதே..., உன்னைத்தானே..., வச்சுக்கவா உன்ன மட்டும்....
இசை: இளையராஜா.

தம்பிக்கு எந்த ஊரு

பாடல்கள்:
காதலின் தீபம் ஒன்று....
இசை: இளையராஜா.

9.

நான் மகான் அல்ல

பாடல்கள்: மாலை சூடும் வேலை...
இசை: இளையராஜா.

தங்க மகன்

பாடல்கள்: ராத்திரியில் பூத்திருக்கும்....., அடுக்கு மல்லிகை....
இசை: இளையராஜா.

மூன்று முகம்

படம் மட்டுதான் பிடிக்கும்.


10.


ப்ரியா

பாடல்கள்: ஏ பாடல் ஒன்று..., டார்லிங் டார்லிங் டார்லிங்..., என்னுயிர் நீதானே....
இசை: இளையராஜா.

கை கொடுக்கும் கை

பாடல்: தாழம் பூவே வாசம் வீசு...
இசை: இளையராஜா.

புதுக்கவிதை

பாடல்கள்: வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது.....
இசை: இளையராஜா.


பின்குறிப்பு: கடுமையான போட்டியின் காரணமாக ஒவ்வொரு இடத்திலும் மூன்று படங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

அப்புறம்.. இதனைத் தொடர்வதற்கு நண்பர் பதிவுலகில் பாபுவை அன்புடன் அழைக்கிறேன்....

Tuesday, November 02, 2010

வியாபாரி மனசு - சிறுகதை

எனக்கு அப்போது ஒரு 12 வயது இருக்கும்... வீட்டில் கட்டிலுக்கு அடியில் அட்டை பெட்டிகள் நிறைய பட்டாசாய் நிறைந்திருந்தது.

அடிக்கடி அதை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டேன்.

"அம்மா இதுல இருக்கறதை நான் வெடிக்கலாமா?"

"நீ வெடிக்காமயா வெடிடா... ஆனா நம்ம கடை இங்க இருக்குது இல்லியா. அதனால தூரமா போயி வெடி" என்றார்.

தீபாவளிக்கு நம்ம வீட்டு முன்னாடி பட்டாசு வெடித்து நம் வீட்டு முன்பு வெடித்த பட்டாசு குவியல்கள் இருப்பதைப் பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி. எங்கோ போய் பட்டாசு வெடிப்பதில் என்ன இருக்கிறது. அம்மா அப்படி சொன்னதற்கு நான் எதுவும் சொல்லவில்லை.

கடையில் தீபாவளி விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அதனை சென்று வேடிக்கை பார்த்தேன். தீபாவளி நெருங்க நெருங்க... இரவிலும் கடை முழுதாக திறந்திருந்தது.

வீட்டில் இரவு நேரங்களில் மாற்றி மாற்றி கடையில் அமர்ந்திருப்பார்கள்.

எனக்கு தூங்காமல் அப்படி அவர்களுடன் அமர்ந்திருப்பது பிடித்திருந்தது. தீபாவளி அன்று மதியம் வரையில் எங்களது பட்டாசு கடையில் விற்பனை இருந்தது.

பட்டாசுகள் வரிசையாக மர ரேக்குகளில் அழகாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. தீபாவளி அன்று வந்து வாங்குவது பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளாக இருந்தனர். அன்று மிகவும் குறைந்த விலையில் பட்டாசு விற்கப்பட்டது.

அம்மாவும் கடையில் நின்று வாங்க வருபவர்களுடன் வரும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் எதாவது ஒரு பட்டாசு பாக்கெட்டை கூடுதலாக எடுத்துக் கொடுத்தார்.

எனக்கு அது பிடிக்கவில்லை. மர ரேக்குகளில் பட்டாசுகள் குறைய குறைய எனக்கு கஷ்டமாக இருந்தது. என்ன இந்தம்மா சும்மாவே அதுங்களுக்கு எடுத்துக் கொடுக்கறாங்களே.  அதோட விலையே 15, 20 ரூபா ஆகுதே என்று நினைத்தேன்.

அது எப்படி அம்மாவுக்கு புரிந்ததோ தெரியவில்லை.

"பாவம் சின்னப்பசங்க நேத்து வரைக்கும் பட்டாசு அப்பா வாங்கித் தருவாரோ மாட்டாரோன்னு ஏங்கி இருக்கும்ங்க. இப்ப கூட தீபாவளி அன்னைக்குதான் வாங்கித்தந்தாருன்னு ஒரு நினைப்பு மனசுல இருக்கும். இப்ப அதுங்களுக்கு ஒரு சின்ன சந்தோசம். இன்னிக்கு வந்ததால இது நமக்கு ஃப்ரியா கிடைச்சதுன்னு அதான்" என்றார் பொதுவாக.


அப்ப நான் மட்டும் சின்னப்பையன் இல்லியா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

கடையில் இப்போது எதுவுமே இல்லை. எல்லாமே விற்றும், இலவசமாகக் கொடுக்கப்பட்டும் தீர்ந்துவிட்டது.

பட்டாசுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மர ரேக்குகள் காலியாகக் கிடந்தன.

ஓடிப்போய் கட்டிலுக்கு அடியில் பார்த்தேன் வெறுமையாய் இருந்தது.

அதனைப் பார்ப்பதற்கு எனக்கு என்னவோ போல் இருந்தது. என் மனசும் வெறுமையானது.

அதுவரை உழைத்து மிகவும் களைத்துப் போய் குடும்பத்தில் எல்லோரும் படுக்க இடம் கிடைத்தால் போதும் என சென்று படுத்தனர்.

எனக்கு படுக்கவும் பிடிக்கவில்லை. கண்ணில் என்னையும் மீறி மெலிதாக கண்ணீர். அப்புறம் என்னையும் அறியாமல் தூங்கிப் போனேன்.

மாலையில் அம்மா என்னை எழுப்பிவிட்டார்.

"போடா நாலு மணி ஆயிடுச்சு போய் குளிச்சி இந்த புது சட்டைய போட்டுட்டு வா" என்றார்.

எனக்கு வெறுப்பாக இருந்தது. புது சட்டையை போட்டு என்ன பண்றது என்று நினைத்தவாறே அமர்ந்திருந்தேன். அம்மா என்னை இன்னொரு முறை மிரட்டினார். அதனால் சென்று குளித்துவிட்டு வந்தேன்.

வந்து புது சட்டை போட்டபிறகு...

அம்மா பீரோவில் இருந்து ஒரு கவரை எடுத்துப் பிரித்தார். அதில் நான் கடையில் ஆசையாய் தொட்டுப் பார்த்த பட்டாசுகள் அனைத்தும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன.

அதனைப் பார்த்தவுடன் எனக்கு மனசு மகிழ்ச்சியால் துள்ளியது. ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிக் கொண்டேன். கண்களில் என்னையும் மீறி மீண்டும் கண்ணீர். அம்மா என்னைப் புரிந்தவராய் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

அந்த பட்டாசுகளை எடுத்துச் சென்று காலியாகக் கிடந்த மர ரேக்கில் வரிசையாக அடுக்கினேன்.

மனசு நிறைவாய் இருந்தது.