Search This Blog

Saturday, January 31, 2015

இசை - திரை விமர்சனம்


ஒரு இசையமைப்பாளரின் இசை வாழ்வு.. அவரது தலைக்கனத்தால் முடிய, அங்கு அவரது சிஷ்யனின் வளர்ச்சி துவங்குகிறது. புகழ் போதையில் மிதந்த ஒருவன், அது அப்படியே தன் கீழ் வேலை செய்தவனுக்கே போக... அதை தாங்கிக்கொள்ள முடியாமலும், தன் புகழை மீட்டெடுக்கவும் அவன் எந்த எல்லை வரை செல்கிறான் என்பதே இசை.

படத்தில் சிஷ்யனாக எஸ்.ஜே. சூர்யா, இயற்கையாக உருவாகும் சத்தங்களை இவர் இசையாக உருவாக்கும் காட்சிகள் அழகு. பின்னர் அதே சத்தங்களை வைத்தே அவரை உளவியல் ரீதியாக வீழ்த்தும் காட்சிகள் அதிரடியாக இருக்கின்றன.

படம் முழுக்கவே சத்யராஜ் வரும் காட்சிகள் எல்லாம் அதகளம். அலட்சியமாக அசத்துகிறார். நான் துப்புவதுதான் இசை என அகங்காரமாக பேசும் போதும் சரி, மார்க்கெட் இழந்து வீழ்ந்த அவமானத்தை வெளிப்படுத்தும் போதும் சரி தேர்ந்த நடிப்பு. இவரது உளவியல் தொல்லை தாங்க முடியாமல் கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சூர்யா இவர் காலில் விழ... அப்போதும் அவரது தெளிவை சோதிக்கும் காட்சி அருமை.

சத்யராஜ் வீட்டு வேலைக்காரனாக கஞ்சா கருப்பு... படம் முழுக்கவே மைன்ட் வாய்சிலேயே வசனம் பேசி , முகபாவங்களிலேயே நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரம்... நன்றாகவே செய்திருக்கிறார்.

தம்பி இராமையாவும் இருக்கிறார். வரும் காட்சிகளில் எல்லாம் நம் கேட்கும் திறனையும் மீறி.. ஹை டெசிபலில் கத்தி வசனம் பேசுவது..எரிச்சலாய் இருந்தது.

இதற்கு முந்தைய படங்களில் ஒரு நடிகனாக எஸ். ஜே. சூர்யாவை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால் இதில் கச்சிதமாக பொருந்துகிறார். குறிப்பாக இயற்கை சத்தங்களை சிரத்தையாக கவனிக்கும் காட்சிகள் , இரண்டு மாத சிசுவுடன் பேசும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். ஒரு இசையமைப்பாளராகவும் அசத்தி இருக்கிறார்... பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே பக்கா...

படம் மூன்று மணி நேரம் பத்து நிமிடங்கள் ஓடுகிறது. ஆனால் இவ்வளவு நேரம் ஓடுவது தெரியாமல் காப்பாற்றி இருப்பது... படத்தின் வசனங்கள். நிறைய வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டி ரசித்தனர்.

ஒளிப்பதிவு மிக அருமை, குறிப்பாக அந்த மலைப்பிரதேச காட்சிகள் எல்லாம் எல்லா ஃப்ரேமும் புகைப்படமா எடுத்து ஒட்ட வச்ச மாதிரி அழகு. ஆர்ட் டைரக்டர் செமயா வேலை பாத்திருக்கார் இதுல, செட்டிங்ஸ் எல்லாமே சூப்பர்.

கதாநாயகியாக முதுமுகம்!!... சாரி புதுமுகம் சாவித்திரி. நன்றாக நடிப்பு வருகிறது. ஒரு ஜாடையில் அமலா போல இருக்கிறார். என்ன ஒன்னு இப்ப இருக்க அமலா போல!! ஒரே ஒரு காட்சியில் அன்பே ஆருயிரே நிலா வருகிறார்.

முதல் பாதியில் தொடர்ந்து பத்து நிமிடங்கள்... சூடேற்றும் காட்சிகள் வருவதால், குடும்பத்துடன் பார்க்க முடியாது.

படத்தில் உள்ள லாஜிக்கல் மீறல்களை எழுதி வைத்து கேள்வி கேட்கும் விமர்சகர்கள் வாயடைக்கவே இப்படி ஒரு கிளைமேக்ஸ் வச்சிருக்கார் போல. உண்மைலயே தில்லுதான். வித்தியாசமாதான் இருக்கு இதுவும்.

இறுதியில் அந்த வேலைக்காரன் அவரிடம்... "இப்பதான சாப்பிட்டிங்க இன்னும் பசிக்குதா" என்று கேட்டு வெறிப்பது போல் முடித்திருந்தால் இன்னும் அதகளமாக இருந்திருக்கும்.

இசை - ஒரு முறை பார்க்கலாம், பல முறை கேட்கலாம்.

Saturday, January 17, 2015

ஐ - திரை விமர்சனம்


 
பாடி பில்டிங்கில் சாதிக்கத் துடிக்கும் ஒருவன் சந்தர்ப்பவசத்தால் மாடலிங் செய்யப்போய் அதில் அவனுக்கு உருவாகும் எதிரிகளால் அகோரமாக மாற்றப்பட்டு சீரழிவதுதான் கதை.

இதில் நடித்ததற்காக நிச்சயம் விக்ரம் பாராட்டப்பட வேண்டியவரே. உடலை வருத்தி உழைத்திருக்கிறார், உடல் மொழியும் அபாரம். அப்ப நான் செத்துடுவனா டாக்டர்னு சுரேஷிடம் கேட்கும்போது மேக்கப்பையும் தாண்டி அபாரமாக நடிப்பு வெளிப்படுகிறது. ஆனால் இவர் பேசும் சென்னைத் தமிழ் கேட்டால் நமக்கு மெர்சலாகிவிடுகிறது. சுத்தமாக இவருக்கு அது பொருந்தவில்லை. இவரும் எமியும் சென்னைத் தமிழ் பேசிக்கொள்ளும் காட்சியில் இவரை விட எமியே சிறப்பாக செய்திருந்ததாக தோன்றியது எனக்கு.

கூடையில் தூக்கிவரப்படும் ஆப்பிளாக எமி.... சின்ன ஸ்டிக்கர் பொட்டில் அவ்வளவு அழகாக இருக்கிறார். அதே போல சின்னச் சின்ன உடைகளிலும். :P :P நடிப்பிலும் குறை வைக்கவில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வாடிப்போன பூக்களுக்கெல்லாம் பூக்களே சற்று ஓய்வெடுங்கள்னு ஓய்வு கொடுத்துட்டு, இவருக்கு கொடுக்கலாம் அந்த வாய்ப்ப... தண்ணி தெளிச்ச பூ மாதிரி அவ்லோ ஃப்ரெஷ்ஷா இருக்கார். 

சந்தானம்...
விக்ரமுக்கு கூடவே இருந்து உதவும் ஒரு துணைக் கதாபாத்திரம்... அவ்லோதான், அதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இந்த ரோலுக்கு விவேக் இருந்திருந்தா நிச்சயம் கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னிருப்பார் அந்நியன்ல பன்ன மாதிரி. படம் போறடிக்கறதுக்கு இவரும் இவர் வரும் டுபாக்கூர் பேட்டி சீன்களும் ஒரு முக்கிய காரணம். அந்த பேட்டி சீன்களெல்லாம் கடுப்படிக்கும் ரகம்.

அப்புறம் வில்லன்களா வரும் உபன், ராம்குமார், சுரேஷ், திருநங்கை இவங்கெல்லாம் எப்படி இந்த படத்துல நடிக்க ஒத்துக்கிட்டாங்களோ தெரியல. விக்ரம விடவே அகோரமா காட்டப்படறாங்க.

இதுல திருநங்கைக்கு விக்ரம் மேல இருக்கற கோபம் மட்டும்தான்,  உடல் மற்றும் பெர்சனாலிட்டி வச்சி நம்மல நிராகரிச்சுட்டானே, அசிங்கப்படுத்திட்டானேனு விக்ரம அதை வச்சே பழி வாங்க நினைக்கறது ஓரளவு பொருந்துது. மத்ததெல்லாம் சிரிப்பு அல்லது எரிச்சல் வரவைக்கும் கோபமே..

மத்த ஷங்கர் படங்கள் போலவே இதுலயும் ஒளிப்பதிவு மிக அருமை. ஆனா அக்கம் பக்கம் யாருமில்லா அந்த வீட்டை... ச்சே நாம இப்படி ஒரு இடத்துல இருந்தா நல்லாருக்குமேங்கற மாதிரி காட்டாம... மத்த செட் ப்ராப்பர்ட்டி மாதிரி சாதாரணமா காட்டிருக்காங்க. 

ரகுமான் பின்னணி இசை அட போட வைக்கவும் இல்ல... குறை சொல்ற மாதிரியும் இல்ல.

ஷங்கர் பத்தி சொல்லனும்னா... அவர் இந்த படத்து காட்சிகளிலும் பாடல்களிலும் அங்கங்க வச்சிருக்கற விளம்பரங்களோட கான்செப்ட்டும் அதை அவர் எடுத்திருக்க விதமும் அவ்வளவு அருமையா இருக்கு. இவர் விளம்பரம் டைரக்ட் பன்னவந்தா நிச்சயம் நிறைய சுவாரஸ்யமான விளம்பரங்கள் நமக்கு கிடைக்கலாம். 

ஒரு பகுதி கடந்தகாலம் அடுத்த பகுதி நிகழ்காலம் மாதிரியான ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா!!!! ;) ;) போன்ற நம் எழுத்தாளர் தாத்தாக்களின் க்ரைம் நாவல் ஸ்டைல் திரைக்கதை ஒரு மணி நேரம் வரை மட்டுமே எடுபட்டிருக்கு. 

ஆடியோ ஃபங்ஷன், போஸ்ட்டர்ல எல்லாம் பாடி பில்டிங்குக்கு கொடுத்த முக்கியத்துவம் வச்சி படத்துல பாடி பில்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாருன்னு நினைச்சேன்... ஆனா ஏமாத்திட்டாரு.

மத்தபடி... 

சண்டைக்காட்சிகள் எல்லாமே அளவுக்கதிகமான நீளம். ஒவ்வொன்னும் 10 முதல் 15 நிமிடங்கள் வருது. ஒரு சண்டை முடியறதுக்குள்ள. அதுக்கு முன்னாடி என்ன சீன் வந்திச்சு, எதுக்காக சண்டை போட்டுக்கறாங்கன்னே மறந்துடுது.

அப்புறம்...

இந்தியாவிலேயே எல்லா ப்ராடக்டும் தயாரிக்கிற இன்ட்டர்னேஷனல் கம்பெனி ராம்குமார்துதான், மத்தவங்கெல்லாம் லோக்கல் விளம்பரதாரர்கள் மாதிரியான சித்தரிச்சிருக்கறது எடுபடல.

பிரபல மாடலான எமிக்கு வேற எந்த மாடலையுமே தெரியாதாம் ஒரே தடவை பாத்திருக்கற விக்ரம்கிட்ட வந்து சேர்ந்து நடிக்க சொல்லி, தானே ஜிம்முக்கு அசால்ட்டா நேர்ல வந்து கெஞ்சுகிறார்.

உபன்க்கு ராம்குமார் கம்பெனி ப்ராடெக்ட் விட்டா வேற வாய்ப்பே இந்தியால இல்லையாம்.. ரியல் எஸ்டேட் விளம்பரம் நடிக்கற அளவுக்கு, உடனே இறங்கிடுவாராம். மூட்டைத்தூக்கி எடுபிடி வேலை பாத்தவங்களுக்கு வேலை முடிஞ்ச உடனே கூலி தர மாதிரி... உபன் ஒரு லோக்கல் விளம்பரத்துல நடிச்சு முடிச்ச உடனே அவர் கையில காசு கொடுத்து அனுப்பறாங்க. :) :) :)

இந்தியாவின் ஒரே இன்ட்டர்னேஷனல் கம்பெனி அதிபரான ராம்குமார்... தானே விளம்பரம் நடிக்கற நடிகர்கள் முதற்கொண்டு நேரடியா அவங்க கிட்டயே பேசி டிசைட் பன்றாரு. எந்த இடம்னே புரியாத செட்ல எல்லாம் சர்வ சாதாணமா போய் உட்கார்ந்திருக்காரு. மத்தவங்களவிட அதிகமாக லோக்கலா வசனம் பேசறாரு. ஷ்விம் ஷூட்ல நீச்சல்குளம் பக்கத்துலயே நிக்கறவருக்கு, அவ்ளோ தேனி கொட்டும் போது.... குறைந்த பட்சம் நீச்சல் குளத்துல குதிக்க கூடவா தோனாது. நிதானமா நின்னு அத ஏவி விட்ட விக்ரம்கிட்டயே... இப்ப என்னப்பா பன்றதுன்னு கேட்டுட்ருக்காரு. :P 

வில்லன் க்ரூப் ஒன்னா சேர்ந்து விக்ரம்க்கு எதிரா தம் அடிச்சிக்கிட்டு ப்ளான் போடறது. மறுபடியும் ஒன்னா சேர்ந்து அதை விக்ரம்கிட்டயே சொல்றதெல்லாம்... மரண காமெடி. 

படத்துல அவங்க ரெண்டு பேரோட காதல் ரொம்ப முக்கியம். ஆனா காதல் காட்சிகளே இல்ல.  நின்னு பேசறாங்க, கை கோத்துட்டு நடக்கறாங்க. அவ்லோதான். கல்யாண ஆல்பத்துக்கு போட்டோ எடுக்கறவங்களே இதைவிட கிரியேட்டிவ்வா யோசிப்பாங்க. :) :) :)

அதுக்கும் மேலங்கற வசனத்தை எத்தனை தடவை சொல்வாங்களோ... புரியாத புதிர்ல ரகுவரன் ஐ நோ ஐ நோ சொன்னத விட அதிகமா இந்த படத்துல இந்த வசனம் வருது.

மொத்தத்தில் ஐ..
எதிர்பார்த்ததுக்கும் கீழ!!!
(எதிர்பார்ப்பில்லாமயே பார்த்தாலும். :) :) )