Search This Blog

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு - திரை விமர்சனம்

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்குது படம்... திரிஷா ஒரு திரைப்பட நடிகை.. இது எங்களுக்குத் தெரியாதான்னு கேக்காதீங்க... படத்திலயும் நடிகையாவே வர்றாங்க... அவங்களைக் காதலிக்கற தொழிலதிபரா மாதவன் வர்றார். படம் ஆரம்பிக்கும் போது சூட்டிங் ஸ்பாட்ல இருக்கற அவங்களைப் பாக்க மாதவனோட குடும்பம் வருது.. அங்க அவங்க சூர்யாவோட (நடிகர் சூர்யாவேதான்) கட்டிப்பிடிச்சு... ஆடறதைப் பாக்க சகிக்காம மாதவனோட அம்மா எழுந்து போயிடறாங்க... சூர்யாவோட பொண்ணோட கான்ஃபிரன்ஸ் கால்ல திரிஷா பேசறதை, முத்தம் கொடுக்கறதை... சூர்யாவுக்குக் கொடுக்கறதா மாதவன் தப்பா நினைச்சுடறார்.. அப்புறம் ஒரே கேரவன்ல வேற வேற பகுதிகள்ல... ஒரே நேரத்துல சூர்யாவும், திரிஷாவும் உள்ளே போறதை ஒன்னா போறதா நினைச்சுக்கறார் மாதவன்... இதனால திரிஷா மேல சந்தேகமும் கோபமும் அதிகமாகுது அவருக்கு...

அதை கார்ல போய்க்கிட்டே மாதவன் திரிஷாகிட்ட கேக்க... அந்த ஆத்திரத்துலயும், கோவத்துலயும் வண்டி ஓட்டிட்டு வரும் போது எதிர்ல வர்ற ஒரு கார் மேல மோதிடறாங்க திரிஷா... அப்ப கோபத்தோட ரெண்டு பேரும் தற்காலிகமா பிரியறாங்க... அப்புறம் மூனு வருசம் கழிச்சி திரிஷா... அமைதியா இருக்கனும்ங்கறதுக்காக.. அவங்களோட தோழி சங்கீதாவோட பாரிஸ் போயி அங்க இருந்து கிளம்பர ஒரு சொகுசுக் கப்பல்ல டிராவல் பண்ணி ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்னு கிளம்பறாங்க.... அங்க அவங்க என்ன பண்றாங்க அப்படிங்கறதை வேவு பாக்க ஒருத்தரை நியமிக்கறார் மாதவன்... அப்படி வேவு பாக்க நியமிக்கப் படறவர்தான்.. முன்னால் இராணுவ வீரரான கமல்....

கமலோட நண்பர் ரமேஷ் அரவிந்த்.. அவருக்கு கேன்சர் நோய் இருக்கு... அதுக்கான சிகிச்சைக்காக பணம் தேவைப்படறதாலதான் இந்த வேவு பாக்கற வேலைக்கே ஒத்துக்கறார் கமல். கமலும் திரிஷாவை அவருக்குத் தெரியாம பின் தொடர்ந்து வர்றார்.. திரிஷா ரொம்ப நல்லவங்க.. அவங்க மாதவன உண்மையிலேயே விரும்பறாங்க... எந்த தப்புத்தண்டா பண்ணவும் இங்க வரலை... உண்மைலயே ரிலாக்ஸ் பண்ணத்தான் அந்த டிரிப் வந்திருக்காங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டு... மாதவன்கிட்ட சொல்றார்.. உடனே அவர் சரி உன் வேலை முடிஞ்சது நீ இந்தியா வந்திருன்னு சொல்றார்.. அவருக்குத் தரவேண்டிய பணத்தையும், இனிமே உனக்கு அங்க வேலை இல்லையேன்னு சொல்லித் தர முடியாதுன்னு கல்தா கொடுக்க பாக்கறார்....

அதுக்குள்ள ரமேஷ் அரவிந்துக்கு ஆபரேசன் பண்ணியே ஆகனும்ங்கற கட்டாயமும் வந்திடுது... அதனால திரிஷாவைப் பத்தி கமல் மாதவன்கிட்ட தப்பா சொல்ல ஆரம்பிக்கிறார்.. அதுல ஆர்வமாகி ஆபரேசனுக்குப் பணம் கட்டறார்... அதனால வர்ற குழப்பங்களும்.. அதை அவங்க எப்படி அவிழ்க்கிறாங்க அப்படிங்கறதுதான் மீதி கதை......

கமல் எல்லாரையும் ஓரங்கட்டி நான் மட்டும்தான் நடிப்பேன்... எல்லாரும் வேடிக்கை பாக்கனும்னு அடம்புடிக்காம... அந்த ரோலுக்கு என்ன தேவையோ அதை மட்டும் சரியா செஞ்சிருக்கார்.. அதுவே பாக்க நல்லாருக்கு... படத்துல கமலயும் மீறி ஸ்கோர் பண்றாங்கன்னா அது சங்கீதாதான்...

திரிஷாவோட தோழியா வர்றாங்க.. ஆனா படம் முழுக்க திரிஷாவைவிட இவங்களுக்குதான் நடிக்கறதுக்கு வாய்ப்பு அதிகம்... அதையும் நல்லா பயன்படுத்திக்கிட்டு அசால்ட்டா நடிச்சிருக்காங்க... திரிஷாவையும் குறை சொல்ல முடியாது அளவான நடிப்பு... மாதவன் சான்சே இல்லை... பிச்சு உதறிருக்கார்...
ரமேஷ் அரவிந்த்.. அடையாளமே தெரியாம வர்றார்.. ஆனா நல்லா நடிச்சிருக்கார்... ஊர்வசி அவரோட மனைவியா வர்றாங்க... மாதவனோட முறைப்பொண்ணா.... களவானி ஓவியா - பாவம்யா.....

கமலுக்காக வர்ற அந்த ஃபிளாஷ்பேக் பாடல்காட்சி அருமை.. பாடல் ஃபுல்லா ரிவர்ஸ்லயே காட்சியமைப்பு... நேரா சீன் எடுத்துட்டு ரிவர்ஸ்ல ஓட்டறது பழைய ஸ்டைல்தானேன்னு நினைக்கறீங்களா... அதுதான் இல்லை... அந்தப் பாட்டுல... சீனெல்லாம் ரிவர்ஸ்ல ஓடுது... ஆனா பாடற கமலோட வாயசைப்பு மட்டும் நேரா ஓடுது... நல்லாருக்கு பாக்கும் போது அந்தப் பாடல்.. அதுவும் இல்லாம அந்தப் பாடலோட ஆரம்பம் படத்துல ஒரு முக்கியமான ட்விஸ்டோட வருது... அது என்னன்னு படத்தைப் பாத்து தெரிஞ்சுக்கோங்க... ஆனா... மேட்டர் ஒன்னும் பெருசா இல்லை... கமல் தசாவதாரத்துல சொல்லிருந்த அதே பட்டர்பிளை எஃபக்ட்தான்....
கமல் அவரை வேவு பாக்கத்தான் வந்திருக்காருன்னே தெரியாம அவரோட நட்பா பழக ஆரம்பிச்சுடறாங்க திரிஷா.... அந்த ஃபிளாஷ்பேக் சீனுக்கு அப்புறம்... ரெண்டு பேருமே அவங்களுக்குள்ள மறைச்சி வெச்சிருக்கற உண்மைய ஒருத்தொருக்கொருத்தர் சொல்லிடனும்னு நினைக்கிறாங்க.. அந்த சீனெல்லாம் நல்லாருக்கு...

பின்னணி இசை நல்லாருக்கு... பாட்டெல்லாம்.. படத்தோட திரைக்கதையோட ஒட்டியே வர்றதால எதுவும் தனியா பிரிச்சு பாக்க முடியாதபடி நல்லாருக்கு பாக்கறதுக்கு....

படத்துக்கு இன்னொரு பெரிய பிளஸ்.. வசனங்கள்... படம் ஆரம்பிச்சதுல இருந்தே நிறைய வசனங்கள் நல்லாருக்கு.... வசனத்துக்காகவே இன்னொரு தடவை பாக்கலாம்னு இருக்கேன்... அதே நேரம்....

தமிழ் மெல்லச் சாகட்டும்
தமிழ் பொருக்கப் போயிருக்கு

அப்படிங்கற வசனம்லாம் வந்து கோவப்படுத்தறதையும் சொல்லியாகனும்... இந்த ரெண்டு வசனம் வந்துதான்.. இது கலைஞரோட பேரன் தயாரிச்சப் படம்ங்கறதை நியாபகப்படுத்துது.... ஏன் இப்படில்லாம்... கலைஞர் ஐயா... நீங்க இதுக்கு ஒரு நியாயம் சொல்லுங்கய்யா....

படம் ஆரம்பத்துல இருந்தே சீரியஸா போகுது... அங்கங்க லைட்டா சிரிக்க முடியுது.. அப்புறம் இடைவேளைக்கு அப்புறம்... மாதவனும் வந்து இவங்களோட சேர்ந்தப்புறம் கொஞ்ச நேரம் நல்ல காமெடி... ஆனா கிளைமேக்ஸ்.. ஏத்துக்கக் கூடியதா இல்லை.... சப்புன்னு ஆயிடுது... என்ன இப்படி பண்ணிட்டாங்க அப்படின்னு ஒரு நினைப்பு வந்திடுது..

மன்மதன் அம்பு - இலக்கு வரை சரியாகப் பாய்ந்து... கடைசி நேரத்தில் குறிதவறிய அம்பு..

Sunday, December 19, 2010

கண்ணில் அன்பைச் சொல்வாளே - சிறுகதை

அப்போது நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.. ஸ்கூல் முடிஞ்சதும் பிசிக்ஸ் டியூசன் போயிட்டு நைட்டுதான் வீட்டுக்கு வருவேன். அன்று கொஞ்சம் அதிகமாகவே லேட்டா வந்தேன்...

தினமும் நான் நைட்டு வந்தவுடன்... அதுவரை நான் எப்போது வருவேன் என்று என் அக்கா எதிர்பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறாள் என்பதை அவளது நிம்மதியான வெளிப்பாடுகளே காட்டிக்கொடுத்துவிடும்.. அன்றும் அப்படித்தான்... ஆனால் அவளது முகம் இருண்டிருந்தது....

என் முகம் பாராமல் எனக்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்... அவள் விழியோரம் அவளையும் அறியாமல் அவ்வப்போது கண்ணிர் வழிவதும் அதை நான் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவோ அல்லது பார்த்துவிடப் போகிறேனோ என்ற பதைபதைப்புடனோ தாவனியில் துடைத்து விட்டுக்கொண்டிருந்தாள்....

அக்கா ஏன் அழுகிறாள்.... எனக்கு பசி பறந்தோடியது....

"என்னாச்சுக்கா ஏன் அழற"

"நாளைக்கு நீலாவுக்குக் கல்யாணம்டா.. போனவாரம் அவ பத்திரிக்கை வைக்க வந்த போது போலாம்னு அம்மா சொன்னாங்க.. இப்ப கடைசி நேரத்துல.. அவ கல்யாணம் கருப்பூர்ல நடக்குது அவ்லோ தூரம்லாம் கூட்டிட்டு போக முடியாதுங்கறாங்க... கண்டிப்பா வருவேன்னு ஃபிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.. நீலாவும் எனக்கு எப்படின்னு தெரியும் இல்ல உனக்கு... எதுக்கு என்னை ஆசை காட்டி ஏமாத்தனும்... நீ சாப்பிட்டப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்டா..." என்றாள்... சொல்ல சொல்லவே அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது...

அவள் கண்ணீர் வடிப்பதை என்னால் தாங்க முடியவில்லை.... உடனே அம்மாவிடம் போய் குதித்தேன்... நீங்க அவளை நீலாக்கா கல்யாணத்துக்கு கூட்டிட்டு போங்க இல்லன்னா நான் கூட்டிட்டு போறேன்... ஏன் அவளை இப்படி அழவிடறீங்க... என்றேன்...

அக்கா அழறாளே என்ற பதட்டத்தில் எனக்கும் அழுகை வந்தது......

இருவரும் அழுவதைப் பார்த்தவுடன் அம்மா அக்காவை கல்யாணத்திற்குக் கூட்டிச் செல்ல ஒத்துக் கொண்டார்கள்...

மகிழ்ச்சியுடன் என் கையைப் பிடித்து மெல்ல அழுத்தினாள் அவள்... அந்த மெல்லிய அழுத்தம் தரும் அன்பின் உணர்வை வார்த்தைகளில் எழுத முடியாது.

எனக்கு அக்காதான் எல்லாம்.. அவள் என் தாய் போன்றவள்.. விசயம் சின்னதோ பெருசோ அது மேட்டர் இல்லை... என்னை யார் என்ன சொன்னாலும் தாங்க மாட்டாள்... அம்மாவே என்னை கண்டித்தாலும்... உடனே அவள் கண்ணில் நீர் கோர்த்துவிடும்.... எனக்கும் அப்படியே... அதனாலேயே எங்கள் இருவரில் யாரைத் திட்ட நினைத்தாலும் வீட்டில் இருவரில் ஒருவர் வீட்டில் இல்லாத போதே செய்தனர்....

இதோ அந்த அக்காவுக்குக் கல்யாணமும் முடிந்துவிட்டது... அன்று நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... குதூகலத்துடன் சுற்றித்திரிந்தேன் அன்று மாலை ஒரு வேனில் அவர்கள் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லக் கிளம்பினர்.. அக்காவும் அம்மாவும் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் அழுதனர்....

என்னடா இது.. நல்ல விசயம்தானே நடந்திருக்கு எதுக்கு இவங்க அழறாங்க... என்று நினைத்தேன். உடனே அவளிடம் சென்று....

"அக்கா அழாதேக்கா... எனக்கு ஒரு மாதிரி இருக்கு...."

அவள் கண்களில் இன்னும் அதிகமாகக் கண்ணீர்... அதைப் பார்த்து என் முகம் வாடுவதைக் கண்டவள்... முகத்தைத் துடைத்துக்கொண்டு....

"நல்லா படிடா... அடிக்கடி வாடா அங்க"

"வராம விடுவனா.. இனிமே என் வீடே அதுதான் நீ இருக்கற வீடு என் வீடுதான்ங்கா"

இந்த வார்த்தையில் என்ன கண்டாளோ மீண்டும் கண்களில் நீர் துளிர்த்தது அவளுக்கு....

எப்போதும் நான் என் அக்காவின் பக்கத்தில்தான் படுத்துக் கொள்வேன்... இன்று எனதருகில் அவளது இடம் வெறுமையாய்... மெல்ல மெல்ல அக்கா நம்முடன் இல்லை என்ற எண்ணம் எனக்கு அப்போதுதான் வரத் தொடங்கியது.... அந்த வெறுமை என் மனதிற்குள்ளும் படறத் தொடங்கியது... அன்றிலிருந்து அக்காவின் நினைப்பில் எத்தனை நாட்கள் போர்வையைப் போர்த்திக்கொண்டு அழுதிருப்பேன் என்று தெரியவில்லை..

அன்று அக்காவின் பிறந்தநாள் எங்கள் வீட்டிற்கு மாமாவையும் அக்காவையும் அழைத்திருந்தோம்.. வருடா வருடம் எங்கள் வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றால்.. அம்மாவே எதாவது ஸ்வீட் செய்வார்... அவ்லோதான்..

அந்த வருடம் அக்காவின் திருமணத்திற்குப் பிறகு வந்த பிறந்தநாள் என்பதால் கடையில் கேக் ஆர்டர் கொடுத்திருந்தோம்... அக்கம் பக்கம் வீட்டிலிருந்து எல்லாம்... கூப்பிட்டிருந்தோம்.. கோலாகலமாகக் கேக் வெட்டிக் கொண்டாடினோம்...

அன்று மாலை....

"இனிமே இந்த மாதிரி எனக்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டாம்டா"

"ஏன் கா.... என்னாச்சு"

"இல்லடா... என் பொண்டாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாட இவனுங்க யாருன்னு அவர் கேக்கறார்டா"

எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது....

"நான் யாரா.. என்னக்கா பேசறார் மாமா.. உடனே நீ..........."

"இல்லடா... நான் எதுவும் பேச முடியாதுடா. ஏற்கனவே நீ அங்க வந்து மூனு நாள் இருந்தப்பவே... அக்காவும் தம்பியும் ரொம்பத்தான் சீன் போடறீங்க... என்ன உன் தம்பிக்கு அறிவே கிடையாதா... காலேஜ் போப்போற பையன் இப்படி இருக்கான்... இன்னொருத்தர் வீட்டுக்கு வந்து 8 மணி வரைக்கும் தூங்கிக்கிட்டு.... அப்படின்னு இன்னும் அவரு உன்னை திட்டினதை எல்லாம் என்னால சொல்ல முடியாதுடா... என்னால அதைத் தாங்க முடியலை.... எதுவும் கேக்கவும் முடியாது... இனிமே நீ அங்க வந்தாலும் என்னால இங்க இருந்த மாதிரியே இருக்க முடியாதுடா"

முதல் முறையாக என் வீடு என்று நான் நினைத்திருந்த என் அக்காவின் வீடு.. என் வீடு கிடையாது என்று தோன்றியது....

அதன் பிறகு இன்றுதான் அக்கா வீட்டிற்கு வந்தேன்... அவளது போக்கில் நிறைய மாற்றம் தெரிந்தது... ஆனால் அவளது கண்களில் எனக்கான அன்பு முழுதாய் தெரிந்தது... அவள் என் மீது கொண்டிருந்த அன்பை கண்களில் மட்டுமே  அவளால் வெளிப்படுத்த முடியும் இனி.. என எனக்குத் தெளிவாகப் புரிந்தது..

பெண்களின் வாழ்க்கை திடீரென எப்படி மாறிவிடுகிறது.... இதுவரை எனக்கு இன்னொரு அம்மா என்று நான் நினைத்திருந்த என் அக்கா இனி என் உறவுக்காரர்களில் ஒருத்தி..... மீண்டும் அழுதேன்..... போர்வை போர்த்தாமலே.....

கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண்மேலே

சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
பேசாமல் மெளனத்தினாலே மனதைச் சொல்லிடுவாள்

உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்...
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை

என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்....


Friday, December 17, 2010

ஈசன் - திரை விமர்சனம்

 மேல்த்தட்டு இளைஞர்கள் அதிகப்படியான பணத்தினால் எப்படி சீரழிகிறார்கள், கீழ்த்தட்டு மக்கள் பணத்துக்காக எப்படி சீரழிகிறார்கள், நடுத்தர மக்கள் எப்படி மேல்த்தட்டு மக்களின் தூண்டிலில் சிக்கி சீரழிகிறார்கள், அரசியல்வாதிகள் அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் விதம், தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளை நடத்தும் விதம், இன்றைய மருத்துவர்கள் நோயாளிகளின் மீது கொண்டிருக்கும் கவனம் இதெல்லாம் சேர்ந்துதான் ஈசன்.. இதை எவ்லோ நல்லா சொல்லியிருக்கலாம்.. ஆனா ஆரம்பித்துல பப்புக்குள்ள போன படம்.... அப்பப்பா... படிங்க மேல...

தண்ணி கிளாசுக்குள் சரக்கு சலம்புவதாகக் காட்டப்படும் கிராபிக்ஸ் பின்னணியில் டைட்டிலே அசத்துகிறது. எடுத்த எடுப்பிலேயே படம் விறுவிறுப்பாகத்தான் தொடங்குகிறது. இடைவேளை வரை அரசியல்வாதி, பப், சமுத்திரக்கனி.. இதேதான் மாற்றி மாற்றி வந்து சில நேரம் பரவால்லயே எனத் தோன்ற வைக்கும் படியான காட்சியமைப்பு.. பல நேரம் அடப்போப்பா எப்ப பாத்தாலும் பப்புக்கே போய்க்கிட்டு எனக் குடிகாரர்களே அலுத்துக்கொள்ளும் அளவிற்கு பப்பிற்குள்ளேயே "குடி"கொண்டிருக்கிறார்கள்... அடப்போங்கப்பா....

காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி. அந்த பாத்திரத்தித்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அளவான நடிப்பில் அசத்துகிறார். அரசியல்வாதியாக வந்து போகும் அழகப்பன். அந்த பாத்திரத்திற்கு எந்த எக்ஸ்பிரசனும் தேவையில்லை என்பதால் ஓகே. மற்றபடி வைபவ், அபிநயா, புதுசா வர்ற பல பெண்கள் எல்லாம்... உண்மையில் ரொம்ப பாவம்..

குடி கூத்து என்றே இருக்கும் அரசியல்வாதியின் மகனான வைபவ் இன்னொரு குடிகாரியைப் பப்பில் பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆனால் அவள் மறுத்துவிடுகிறாள். பிறகு அவள் வேறொருவனுடன் பப்பில் ஆடிக்கொண்டிருக்கும் போது போலீஸ் பிடித்துக்கொண்டு போகிறது. அந்தக் குடிகாரியின் தந்தை நான்கு மாநிலங்களில் கொடிகட்டிப் பறக்கும் பெரிய பிசினஸ் மேன்... ஆனால் போலிஸ் ஸ்டேசனில் இருக்கும் அந்த நேரத்தில் அந்தக் குடிகாரிக்கு அது மறந்திடுச்சு போல... நம்ம வைபவ்தான் அவரது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அந்தப் பொண்ணை போலீஸ் ஸ்டேசன் வந்து கூட்டிக்கிட்டு போறார். உடனே அந்தப் பொண்ணு அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறது.. அப்புறம் அரசியல்வாதிக்கும் அந்த பிசினஸ் மேனுக்கும் இடையே நடக்கும் சில மொக்கையான செட்டில்மெண்ட் மற்றும் அந்த குடிகாரியின் கையறுப்பு நாடகத்துக்குப் பின்னர் கல்யாணம் முடிவாகிறது. அதையும் நம்ம வைபவ் வேற ஒரு பொண்ணு கூட குஜால் பண்ணி கொண்டாடலாம்னு கிளம்பிக் காணாமப் போயிடறார்.. அவரை ஒரு உருவம் வந்து மண்டைலயே அடிக்குது.. அது யாருன்னு பாத்தா.. அதுதான் ஈசன்னு அப்பதான் டைட்டிலே போடறாங்க... இன்டர்வெல் விட்டுடறாங்க..........

அப்புறம்.. சமுத்திரக்கனி வைபவைத் தேடிக்கண்டு பிடித்தாராங்கறதுதான் கதை... செகண்ட் ஆஃப்ல ஒரு ஃபிளாஸ்பேக் வருது... அந்த ஃபிளாஸ்பேக்கோட ஆரம்பம்லாம் என்னவோ "கண்ணில் அன்பை" என்று ஒரு மெலடியுடன் ஆரம்பிக்கிறது.. அந்தப்பாட்டு நல்லாருக்கு... அதுக்கப்புறம்.. ஃபிளாஸ்பேக் எப்படா முடியும்னு ஆயிடுச்சு... அப்பாடா ஃபிளாஸ்பேக் முடிஞ்சது அப்படின்னு நினைச்சா.. அப்புறம் அதுக்கப்புறம் வர்ற காட்சிகளைப் பார்த்தா.. படம் எப்படா முடியும்னு ஆயிடுச்சு...  ஒரு 15 வயசுப் பையனை வெச்சு இவ்லோ வன்முறையைக் கையாண்டதுக்காகவே இந்தப் படத்தை சென்சார்ல தடை பன்னிருந்தாலும் அது தகும்.. அவ்லோ வன்முறை... அபிநயா ரொம்ப பாவம்... சசிகுமார் மேல இருக்கற நம்பிக்கைல இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டிருக்காங்க.. நல்ல அழகு, நல்லா நடிக்கத் தெரிஞ்ச நடிகையாவும் இருக்காங்க.. ஆனா அவங்களை சசி யூஸ் பண்ணிருக்கற விதம்.. கண்டிப்பா அபிநயாவோட ஃபேமிலேயே ரொம்ப வருத்தப்படும்.... சாரி சசி. அவங்களும் இப்படி அவரை பிளைண்டா நம்பி அந்த கேரக்டர்ல நடிக்காம இருந்திருக்கலாம்......

இளைஞர்கள்னா இப்படித்தான் இருப்பாங்க அப்படிங்கற சசியோட பார்வை ரொம்ப மோசமா இருக்கு.... அது படத்துல சீனுக்கு சீன் வெளிப்படுது.... 

சசிக்குமார் அப்படிங்கற பேருக்காகத்தான் இந்தப் படம் பார்க்க எல்லோரும் வந்திருப்பாங்க.. கண்டிப்பா ஏமாத்திட்டார்.. சசி.... இந்தக் கதைக்கான "சீசன்" முடிஞ்சு பல வருசம் ஆயிடுச்சே சசி... இந்தக் கதையவே மாத்தி மாத்தி எடுத்திட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரே... அதை விட்டுட்டு காதல் கதைக்கு போய் ரொம்ப வருசம் ஆச்சு... நீங்க மறுபடியும்... ஒரு குட்டிப்பையனை வெச்சி கிளம்பிருக்கீங்க.... ரொம்ப கான்ஃபிடன்ட்தான் உங்களுக்கு....

படத்திலே பாராட்ட வேண்டிய விசயம்னா பின்னணி இசை, கண்ணில் அன்பை பாடல், அப்புறம்.. அங்கங்க நல்லா இருக்கற கேமிரா கோணங்கள்...... மத்தபடி எல்லாமே கோணல்கள்.....

ஈசன் - பாலமுருகன்

உயிரின் விலை - சிறுகதை

"இங்க பாரு விஜய்.. இன்னுமா அதை முடிக்கலை நீ.. எப்ப கேட்டாலும் இதை முடிச்சுட்டு பண்றேன்.. அதை முடிச்சிட்டு பண்றேன்னு எதாவது சாக்கு சொல்லிக்கிட்டே இருக்க. உன்னால என்னோட வேலையை நான் சொல்ற நேரத்துக்கு முடிக்க முடியலைன்னா நான் வேற ஆள் பாக்க வேண்டியிருக்கும்.. உன்னைவிட நல்லா வேலை பாக்கற சின்னப் பசங்க ரொம்ப கம்மி சம்பளத்துக்கே கிடைப்பாங்க. முடிச்சுக் கொடுத்திட்டு நீ வீட்டுக்கு போ"

இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப என் மனதில் ஓடின. இந்த நிறுவனத்தில் நான் சேர்ந்து 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த மேனேஜருக்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அவரும் என்னை மிகவும் மதித்தார். ஆனா இப்ப கொஞ்ச நாளா வேண்டுமென்றே அளவுக்கு மீறி வேலைகள் தரப்படுகின்றன. மேனேஜர் என்னை ஒருமையில் அழைக்க ஆரம்பித்தார். முடிக்க முடியாது என்று தெரிந்தே இவ்வளவு வேலையை சுமத்துகிறாரே என்று முதலில் நினைத்தேன்.

ஆனால் அப்புறம்தான் புரிந்தது முடிக்கக் கூடாது என்றே அவ்வாறு வேலை தருகிறார் என்பதை. அடுத்த வேலை தேடினால் உடனே கிடைத்துவிடும் தான் ஆனால்.. என்னுடைய இத்தனை வருட கடுமையான உழைப்புக்கு இதுதான் மரியாதையா.. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலே இந்தக் கொடுமை சகஜம்தான்.. முடிந்த வரை நம் வேலையைப் புடிங்கிக்கொண்டு நமக்கு கெளரவமான சம்பளம் தர வேண்டிய கட்டம் வந்ததும் நம்மை கழட்டி விட்டு விடுவது. ஆனால் பெயரை வேண்டுமென்றே ரிப்பேராக்கி அனுப்ப முயற்சிப்பதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.. கோபம் கோபமாக வந்தது. ஆனால் என்ன செய்ய... என் கோபத்தை இதோ இப்போது நான் ஓட்டிவரும் வண்டி மீதுதான் காட்டுகிறேன்.. வேறு யாரிடம் காட்ட முடியும்..

"ஆஆஆ ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"

அச்சச்சோ இதையெல்லாம் நினைத்துக்கொண்டே வண்டி ஓட்டி வந்ததில் ஒரு திருப்பத்தில் ஒரு ஆளின் மீது ஏற்றிவிட்டேன்.
படபடவென நான்கைந்து பேர் என்னை சூழ்ந்து கொண்டனர். கன்னடத்தில் எதேதோ திட்டினர். எனக்குப் புரியவில்லை. அதில் ஒருவன் என் முதுகில் நான்கைந்து அடி அடித்துவிட்டான். தலை மீது எச்சில் துப்பினான். அது நான் போட்டிருந்த ஹெல்மெட்டில் விழுந்து வழிந்தது.

எனக்கு அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருந்தது.. என்ன இது.. இது போன்ற தாக்குதலை நான் இதுவரை பார்த்தது கூட இல்லை.. நான் வசிப்பது பெங்களூரில், அந்த திருப்பத்தை ஒட்டிய பகுதி சேரிப்பகுதியாக இருந்தது. இந்த கூட்டம் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.. நான் வண்டியை அவர்களில் ஒருவன் மீது ஏற்றிவிட்டேன் போலிருக்கிறது...

எனக்கு உடல் நடுங்கியது... என்னடா விஜய் உனக்கு நேரமே சரியில்லையே... இப்படி வந்து மாட்டிக்கிட்டியே.. போச்சு போ.. இன்னிக்கு கைல இருக்கற பணம்.. கைல, கழுத்துல போட்டிருக்கற நகையெல்லாம் புடிங்கிக்கிட்டுதான் விடப்போறானுங்க.. சமீபத்தில் இவ்வாறு என் நண்பன் ஒருவனை நான்கைந்து பேர் சூழ்ந்து கொள்ள... ஏ.டி.எம் கார்டு கூட வைத்திருக்காத அவன்.. நாம்தான் எதையும் எடுத்து வரவில்லையே நம்மை விட்டு விடுவார்கள் என்று நினைத்திருக்கிறான். ஆமாம் விட்டு விட்டார்கள் அவன் ஓட்டி வந்த பைக்கைப் பிடிங்கிக்கொண்டு. இப்போது அவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு நடையாய் நடந்து கொண்டிருக்கிறான். அந்தச் சம்பவமெல்லாம் நினைவில் வந்து கிலி ஏற்படுத்தியது.

எனக்கு என் மீதே கோபம் வந்தது.. நாயே முதல்ல பேரை மாத்துடா உனக்கு விஜய்னு பேரு இருக்கறதாலதான் இத்தனை பிரச்சினையும்... என என்னை நானே திட்டிக் கொண்டேன்...

அடிபட்டவன் கன்னடத்தில் எதோ அந்த கும்பலிடம் பேசினான்... அவர்களும் எதோ பேசினர்.. பின் கலைந்து சென்றனர். அந்த ஆள் நொண்டிக்கொண்டே என்னிடம் வந்தான்....

கன்னடத்தில் எதோ கேட்டான்.. எனக்கு கன்னடம் ஓரளவுக்குப் புரியும்தான் ஆனால் இப்போது பயத்தில் ஏதும் புரியவில்லை.

"ஆங்... என்ன சொல்றீங்க.. சார் தெரியாம இடிச்சிட்டேங்க" அவனுக்கு தமிழ் தெரியுமா என என் மூளைக்கு அப்போது யோசிக்கத் தெரியவில்லை. பயத்தில் தாய் மொழியே வந்தது.

"ஓ தமிளா" (அப்படித்தான் உச்சரித்தான்)

நல்லா வேலை அந்தாளுக்கு தமிள்.. சாரி சாரி.. தமிழ் தெரிந்திருந்தது..

"ஆமாங்க.. சாரிங்க நீங்க இந்த டர்னிங்ல நிக்கறது தெரியாம திருப்பிட்டேங்க.. சாரி. வாங்க நானே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறேன்"

"என்னப்பா நீ.. இந்த ஏரியால்லாம் ஒரு மாதிரிப்பா.. பாத்து வரக்கூடாதா.. யாருனே தெரியாத என்னை இடிச்சதுக்கே இவ்வளவு கோவமா வந்து அடிக்கறாங்கன்னா... அவங்கள்ல ஒருத்தனை அடிச்சிருந்தீன்னா அவ்லோதான்"

அடக்கருமாந்திரம் புடிச்சவனுங்களா யாரோ ஒருத்தனை அடிச்சதுக்காடா இந்த அளப்பரை பண்ணீங்க.. ஹெல்மெட்ல எச்செல்லாம் துப்பி வச்சு... எனக்கு நினைக்கவே மீண்டும் அறுவருப்பாகவும், அவமானமாகவும் இருந்தது.

பயம், பதட்டம், கோவம், கடுப்பு எல்லா உணர்ச்சியும் சேர்ந்து இருந்ததால் எதுவும் பேசத் தோன்றாது... அந்தாளை பின்னாடி உட்கார வைத்து அமைதியாக ஹாஸ்பிட்டல் சென்றேன். அந்தாளுக்கான சிகிச்சை செலவு 1500 ரூபாய் ஆகியது..

இனி நான் விஜய் இல்ல இனி நான் விஜய் இல்ல... என்று என் மனதில் நான் தப்பியோடிக்கொன்டிருந்தேன்...

"தம்பி அந்த டீக்கடையில் நிறுத்துப்பா" என்றான் அவன். நிறுத்தினேன்.

"தம்பி நானும் ஒரு டிரைவர்தாம்பா.. பதட்டப்படாத.. இதெல்லாம்.. சகஜமான விசயம்தாம்ப்பா.. எல்லோருக்கும் நடக்கறதுதான். ரொம்ப பதட்டமா பேயறைஞ்ச மாதிரி இருக்கியேப்பா"

அந்த நாயிங்க வந்து அறைஞ்சதுக்கு...பேயே வந்து அறைஞ்சிருக்கலாம்... யாரும் பாக்க முடியாத பேயைப் பார்த்த திருப்தியில விட்டுட்டுப் போயிருப்பேன் என நினைத்தவாறே...

"இல்லீங்க.. இந்த மாதிரி நான் இதுவரை ஃபேஸ் பண்ணினதே இல்ல.. அதான் என்றேன்"

"டிரைவிங்கல இதெல்லாம் சகஜம்தாம்பா.. எப்பவும் ஒரே மூடுல வண்டி ஓட்ட முடியுமா... நான் ஒரு பஸ் டிரைவர்.. என்னோட சர்வீஸ்ல அதிகம் ஆக்சிடெண்ட் பண்ணதே இல்ல.... ஆனா ஒரு தடவை.. நான் வேகமா போயிட்டிருந்தப்ப.. ரோட்டோரமா போயிட்டருந்த ஒருத்தன் சட்டுனு ரோட்ல எறங்கிட்டான். திடீர்னு அப்படி அவன் இறங்கவும் என்னாலயும் கன்ட்ரோல் பன்ன முடியலை.. அடிச்சுத் தூக்கிட்டேன். ஆள் ஸ்பாட்லயே அவுட்டு. இதுக்கெல்லாம் பதட்டப்பட்டா முடியுமா"

அடப்பாவி கொலைகாரனா நீ... பஸ்ல நாயடிக்கற மாதிரி ஒரு மனுசனையே அடிச்சு கொலை பண்ணிட்டு.. இவ்வளவு தில்லா பேசுதே இந்த நாயி... எனக்கு இன்னும் அதிர்ச்சி அதிகமாகியது... நாம் எங்க வாழ்ந்திட்டிருக்கோம்.. வாழ்க்கை மீதான பயம் இன்னும் அதிகரித்தது.

மீண்டும் எதுவும் பேசாமல் அந்த ஆளை அவனது வீட்டில் கொண்டு போய் விட்டேன்.

"சரி தம்பி அடிச்சிட்டு ஓடிப்போயிடாம ஹாஸ்பிட்டல் செலவெல்லாம் பண்ணி வீடு வரை கொண்டு வந்து விட்டுருக்க பரவால்ல... அடிக்கடி வாப்பா"

அடிக்கடி வேற வரனுமா போயாங்க...

"சரிங்க வரேன்.. சரி அந்த ஆளை பஸ் ஏத்தி கொன்னதுக்கு உங்களுக்கு என்ன தண்டனைங்க கிடைச்சது"

அவன் என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான்.. பின் மெல்ல...

"500 ரூபா அபராதம் தம்பி"

எனக்கு பக்கென்றது. ஒரு உயிரைக் கொன்னதுக்கு 500 ரூபா அபராதம்தான் தண்டனையா.. அதிர்ச்சி விலகாமல் வண்டியிருப்பதையும் மறந்து அதைத் தள்ளியபடியே வீடு நோக்கி நடந்தேன்.

Friday, December 10, 2010

இன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்


சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.


- மகாகவி பாரதியார். 

பின்குறிப்பு: நாளை பாரதியார் பிறந்த நாள். அதனால் அவர் நினைவாக மகாகவி பாரதியார் கவிதைகளில் எனக்குப் பிடித்ததில் ஒன்று.

Wednesday, December 08, 2010

இரத்தத்தில் கலந்தவள் - சிறுகதை

ஃபோரத்தில் (பெங்களூரில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்று) இருந்து வெளியே வந்தனர் நவீனும், அரவிந்தும்.

"இதெல்லாம் நம்மளுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை மச்சி" என்றான் நவீன்.

"இல்லை.. தெரியலைடா" இது அரவிந்த்.

"ஆமாம் அதெல்லாம் தெரிஞ்சுருந்தாதான் நாம எப்பவோ முன்னேறி இருப்பமே."

"ஸ்டுபிட் இப்ப என்ன கெட்டுப் போயிட்டம்னு புலம்ப ஆரம்பிக்கற.. நிறுத்துடா"

நின்றான்....

என்னடாது நாம இவன நிறுத்துடான்னா இன்னொருத்தன் நம்ம முன்னாடி நிக்கறானே என்று நிமிர்ந்து பார்த்தான் அரவிந்த்.

"ஏய் மச்சி நீ இந்த ஊர்லதான் இருக்கியாடா? என்னடா ஷாப்பிங்கா? எப்படி இருக்க?" என்று விடை தேவைப்படாத கேள்விகளாகவே கேட்டான் அவனது கல்லூரி (கால) நண்பன் ராஜூ. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறார்கள். ஆனால் இருவருக்குமே எந்த ஆச்சரிய உணர்ச்சியும் இல்லை.

"ம் நீயா.. நீயும் இந்த ஊர்லதான் இருக்கியா? நான் நல்லாருக்கேண்டா. ஷாப்பிங்லாம் ஒன்னும் இல்லடா. இவன் என்னோட ஃபிரண்டு. உச்சா போகனும்னான் அதான் ஃபோரம்ல இருக்கற டாய்லட் போயி போயிட்டு வந்தோம்"

அவன் அதிர்ந்தவனாய் இதெல்லாம் ஒரு பொழப்பாடா என்பது மாதிரி இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

"நாங்கள்லாம் உச்சா போனாலும் ரிச்சா போவம்டா" -அரவிந்த்.

அவனது நண்பன் மனதிற்குள்ளேயே தலையில் அடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

"சரிடா நான் கிளம்பரேன். எனக்கு வேலை இருக்கு" என்று சொன்னவாரே பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றான்.

"எப்படி எஸ் ஆயிட்டான் பார்த்தியா.. எப்படிடா நம்மள பாத்தவுடனே இவனுங்களுக்கெல்லாம் புரிஞ்சுடுது. ஒதுங்கி ஓடிப்போயிடறானுங்க. வேஸ்ட் ஃபெல்லோஸ்" என்றவாரே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர் இருவரும்.

சிறிது தூரம் நடந்து இருவரும் அந்த பார் அண்ட் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தனர்.
வெளிச்சம் அதிகம் நுழையாதவாறு, ஆங்காங்கே வர்ண விளக்குகளின் ஜாலத்தில் குடிமகன்களால் நிரம்பியிருந்தது அந்த பார். பாரின் இருபுறமும் எல்.சி.டி டிஸ்பிளே தொலைக்காட்சிப் பெட்டியை சுவற்றில் பதித்திருந்தனர். அதில் எதோ ஒரு இந்தி நடிகன் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு ஆடிக்கொண்டிருந்தான்.

"என்னடா பொண்ணுங்கள்லாம் வந்திருக்காங்க" - நவீன்.

"ஆமாடா இதுங்கெல்லாம் எங்க உருப்படப் போகுதுங்க. எவன் மாட்டப் போறானோ தெரியலை. மாசா மாசம் இதுங்களுக்கு தண்ணி வாங்கித் தரவே தனியா சம்பாதிக்கனும் அந்த பார்ட்டி. நல்ல வேலை என் ஆளு தங்கம்டா."

"அதையும் உரசிப் பாத்துட்டியா மச்சி"

"ஏய் நோ பேட் தாட்ஸ். அவளைப் பத்தி பேசும் போது இப்படி எல்லாம் பேசுனா எனக்குப் புடிக்காது. ஃபிரண்டுன்னு பாக்க மாட்டேன். கொன்றுவேன்"

"சரி சரி ஓவரா டெம்ப் ஆவதடா.. நாம பார்ல வந்து சும்மாதான் உக்காந்துருக்கோம். இன்னும் ஆர்டர் கூட பண்ணலை அதுக்குள்ள பெனாத்தாதே. ஒரு அரை மணி நேரம் உள்ள போவட்டும்.." என்று சொல்லிவிட்டு சிரித்தான் நவீன்.

இருடா மவனே மாட்டாமயா போயிடப்போற கொஞ்சம் உள்ள போவட்டும் அப்புறம் உன்னை வெச்சிக்கறேன் என்று மனதில் நினைத்தவாறே மெனு கார்டை எடுத்தான்.

"நீயே நீயே.. நானே நீயே.. நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே" என்ற பாடல் ரிங் டோனாக ஒலித்தது.

"ஏய் அம்மா கூப்பிடறாங்கடா.. நான் வெளிய போய் பேசிட்டு வர்ரேன். எனக்கு ஒரு லார்ஜ் சிக்னேச்சர் அப்புறம் உனக்கு என்ன வேனுமோ ஆர்டர் பண்ணு. தோ வந்துடறேன்" என்றவாறே எழுந்து வெளியே சென்றான்.

"ம் சொல்லுங்கம்மா"

"டேய்.. வீட்டுக்கு வர நேரமாகுமாடா"

"ஆமாம்மா இன்னிக்கு வீட்டுக்கு வந்தாதான் வருவேன்மா. ஃபிரண்டு ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு. நானே போன் பண்ணனும்னு நினைச்சேன். நீங்களே கூப்பிட்டுட்டீங்க"

"ஓ.. சரிடா.. பிரமீ எதோ சேலை சுடிதார்லாம் எடுக்கனும்னா கூட வரச் சொல்றா.. பக்கத்துலதான்.. நான் அவ கூட போயிட்டு வந்திடறேன். சாவி கொடுத்துட்டு போகலாமான்னுதான் கூப்பிட்டேன்"

"இல்லம்மா நீங்க சாவி எடுத்துக்கிட்டே போங்கம்மா. நான் நவீன் ரூம்லயே இருந்துக்கறேன். பாத்து போயிட்டு வாங்க"

"சரிப்பா. நீ பாத்து.. சாப்பிட்டுடு வேலை இருக்குன்னு சாப்பிடாம விட்டுடாத"

"சரிம்மா" இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அரவிந்துக்கு அப்பா இல்லை.. அவனை கஸ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியது அவன் அம்மாதான். அம்மாவின் மீது மிகவும் பாசமாய் இருந்தான்.

அவன் வந்து அமர்வதற்கும் பேரர் ஆர்டர் பண்ணியவற்றைக் கொண்டு வந்து வைக்கவும் சரியாய் இருந்தது.

மீண்டும் அரவிந்தின் மொபைலில் "எங்கிருந்தோ அழைக்கும் உன் ஜீவன்...." என்ற பாடல் ஒலித்தது.

"எங்கருந்து மச்சி அழைக்குது உன் ஜீவன்?"

"ஏய் சும்மா இருடா" என்றவாரே காலை அட்டெண்ட் செய்தான்.

"சொல்லுடா செல்லம்." குரல் பம்மியிருந்தது.

"---------"

"இல்லடா எங்க மேனேஜருக்கு இன்னிக்கு பர்த்டே அதான் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்காரு.. அதான் வந்திருக்கேன். அந்த சத்தம்தான் கேக்குது. உங்கிட்ட பிராமிஸ் பண்ணதை மீறுவனா செல்லம். கண்டிப்பா கிளாஸைத் தொட மாட்டேன்" என்றவாரே. சிக்னேச்சர் கிளாஸைத் தொட்டு எடுத்து சத்தம் வராதவாறு மெதுவாக நவீன் கையிலிருக்கும் கிளாசுக்கு சியர்ஸ் வைத்தான்.

"சரிடா செல்லம்.. பார்ட்டி முடிஞ்சதும் நான் மெசெஜ் பன்றேன்."

"----------"

"சரி சரி மறப்பேனா என் இரத்தத்துலயே நீ கலந்திருக்கயே செல்லம். ஐ லவ் யூ" என்றவாரே இணைப்பைத் துண்டித்தான்.

"இரத்தத்துல எல்லாம் அவங்க வந்து எப்படா, எப்படிடா கலந்தாங்க."

"டேய் இன்னிக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கே போல இருக்கு... எனக்கும் ஒரே முடிவுதான்.. அதை ஏற்கனவே சொல்லிட்டேன்.. வீனா எங்கையால சாகாத."

"சரி சரி.. விடு விடு கூல்... இரத்தத்துல கலந்துருக்கறன்னு சொல்றது எல்லாம் ரொம்ப டிராமாத்தனமா இருக்கு மச்சி.. அவ்ளோ லவ் பன்றியா அவங்களை".

"இல்லடா என்னோட பிளட் க்ரூப் AB-. என் பேரு அரவிந்த் அவ பேரு பிருந்தா... பாருடா.. இரத்தத்துலயே நாங்க ரெண்டு பேரும் ஒன்னா கலந்து இருக்கோம் பாத்தியா"

நவீன் மண்டையில் இப்பவே லைட்டா குடையற மாதிரி இருந்தது. ஸ்டைலாக கையை பின்னே கொண்டு சென்று தலையை சொரிந்து கொண்டான். அதை அரவிந்த் கவனித்து விட்டான்.

"ஏய்.. போடா இதுக்குதான் நான் என் லவ் பத்தி யார்கிட்டயும் சொல்றதில்லை"

"சே..சே.. தப்பா எடுத்துக்காதடா. நீ சொல்லு. எனக்கும் ஆச்சரியமாதான் இருக்கு. என்னவொரு மேட்ச் பாரு உங்க ரெண்டு பேருக்கும். சரி இவளோ உணர்ச்சிப் பூர்வமா காதலிக்கறவன் ஏண்டா அவங்ககிட்ட பொய் சொல்ற. உண்மைலயே குடிக்காம இருக்க வேண்டியதுதான"

"அதுக்குதான் முயற்சி பண்ணிட்டிருக்கேன்.. கொஞ்ச நாள்ல நிச்சயம் நிறுத்திடுவேன் மச்சி. ஆனா அது வரைக்கும் என் ஆளு மனசு கஸ்டப்படறதை என்னால தாங்க முடியாதுடா. அவளோட சந்தோசத்துக்காகத்தான் இப்படி அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்ல வேண்டியிருக்கு"

மீண்டும் கையை மெல்ல பின்னே கொண்டு செல்ல இருந்த நவீன். அரவிந்த் உஷாராக அவன் கையையே பார்த்துக் கொண்டிருந்ததால் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"அதுசரி மச்சி... இதுவரை உன் இரத்தத்துல பிருந்தா கலந்திருக்காங்கன்னு சொன்ன. இப்ப தண்ணியடிச்சிட்ட.. ஆல்காஹாலும் இல்ல கலந்திருக்கு"

உடனே அரவிந்தின் முகம் மாறியது. இவன் சொல்வது சரிதானே.. இரத்த வகையில் எழுத்துப் பொறுத்தம் சரியாக இருப்பதையே நினைத்து புழங்காகிதம் அடையும் நான் ஏன் இதுவரை இதை யோசிக்கவில்லை என நினைத்தான்.

அந்த நேரம் மீண்டும் "நீயே நீயே நானே நீயே" ஒலித்தது. எடுத்தான்..

"நான் பிரமீளா பேசறேன்பா.. அம்மாவுக்கு இங்க ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுப்பா. நிறைய பிளட் லாஸ் ஆகிடுச்சு.. AB- ரேர் க்ரூப் கிடைக்காதுங்கறாங்க. எங்கப்பா இருக்க.. எனக்கு என்ன பன்றதுன்னே தெரியலை. சீக்கிரம் வாப்பா"

அம்மாவுக்கு ஆக்சிடெண்டா... அரவிந்தின் உடல் நடுங்கியது... உடனே பதட்டத்துடனும் பயத்துடனும் எழுந்தான்..

"அம்மாவுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சாம்டா உடனே போலாம் வாடா.. நிறைய பிளட் லாசாம் என் க்ருப்தான் அவங்களுக்....."

"ஆல்கஹாலும் இல்ல உன் இரத்துல கலந்திருக்கு" அந்த வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தன.

"அய்யோ" என்று தலையில் கை வைத்தவாரே அந்த இடத்திலேயே தரையில் அமர்ந்தான். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது...

"மப்பு ஏத்திக்க வேண்டியது அப்புறம் ஓவர் மப்புல... இடம் பொருள் தெரியாம உக்காந்து எதையாவது நினைச்சு அழ வேண்டியது. இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு" என்றவாரே இருவர் அவர்களுக்குள் சிரித்து பேசிக் கொண்டே சென்றனர்.

அரவிந்தின் காதில் இப்போது யார் பேசுவதும் விழவில்லை...

"நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே...."

மீண்டும் பாடல் ஒலித்தது.

mother’sday Quotes


Saturday, December 04, 2010

கிளாசிக் (2003) - சிக்கு புக்கு - திரை விமர்சனம்

 டைரக்டர் ஜீவாவோட அசிஸ்டண்ட் மணிகண்டன் (இவர் தாம் தூம் படத்தை அவர் இறந்தப்புறம் முடிச்சுக் கொடுத்தவர்) டைரக்ட் பண்ணிருக்கற முதல் படம்..  அப்படிங்கறதாலயும். நம்ம ஆர்யா நடிச்சுருக்காருங்கறதாலயும் படம் எப்படியும் நல்லாருக்கும் அப்படின்னு நம்பி முதல் நாளே இந்தப் படம் போனேன்....

டைட்டில் முடிஞ்சவுடனே 1985 காரைக்குடி.. அப்படின்னு ஸ்லைடு போட்டுட்டு... அங்க நம்ம ஆர்யா ஒரு டைரிய எழுதறதுல இருந்து படம் ஆரம்பிக்குது... அப்புறம் அடுத்த சீன் 2010 லண்டன் அப்படின்னு இன்னொரு ஸ்லைடு அங்கயும் நம்ம ஆர்யா... இப்படி ஆரம்பம் என்னவோ வித்தியாசமாத்தான் இருந்தது... ஆனா படம் பார்க்க ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசமே புரிஞ்சுடுச்சு... கதை என்னன்னு....

லண்டன்ல இருக்கற ஸ்ரேயா மதுரைக்கும், ஆர்யா காரைக்குடிக்கும் போக வேண்டிய வேலை வருது... ரெண்டு பேருக்கும் ஒரே ஃபிளைட்ல வர்ராங்க அப்படிங்கறதைத் தவிர எந்த சம்பந்தமும் கிடையாது.. ரெண்டு பேரும் பெங்களூர் வந்து அங்கருந்து அவங்கங்க ஊருக்கு ஃபிளைட்ல போறதா பிளான்... ஆனா பெங்களூர் வரைக்கும் வந்த அவங்களால... அங்க நடக்கற ஏர்லைன் ஸ்ட்ரைக்னால அவங்கவங்க ஃபிளைட்ல போக முடியாம... ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டியா நடிச்சு டிரெயின்ல போக வேண்டிய நிலை... அவங்க ஊரு போய் சேர்ரதுக்குள்ள அவங்களுக்குள்ள காதல் வந்திடும்னு நமக்குத் தெரியாதா என்ன.... இதுக்கு நடுவுல ஆர்யா கைல அவங்கப்பாவோட டைரி இருக்கு அதுல அவங்கப்பா (அதுவும் ஆர்யாதான்) அவரோட பழைய காதல் நினைவுகளை எழுதி வெச்சிருக்கார்....

அதைப் படிச்சா எல்லாம் கொரிய மொழில இருக்கு....

என்ன புரியலையா.. மேல படிங்க... இங்க ப்ளூ கலர்ல கொடுத்திருக்கறது எல்லாம் மொழிபெயர்ப்பு... சிகப்பு கலர்ல கொடுத்திருக்கறது எல்லாம்... கொரியா... (ஆனா ஏன் கொரிய மொழில இல்லைன்னு எல்லாம் கேட்கக் கூடாது)..

அப்பா ஆர்யா போலீஸ் தேர்வுல பாஸாயிட்டு டிரெயினிங் போறதுக்கு முன்னாடி அவரோட தாத்தாவ பாக்க காரைக்குடி பக்கம் இருக்கற அவங்க சொந்த கிராமத்துக்கு போறார்... அங்கதான் நம்ம ஹீரோயின பாக்கறார்.. பிரீத்திகான்னு ஒரு புதுமுகம் நடிச்சிருக்காங்க... பார்த்த உடனே அவங்களை ஆர்யாவுக்கு பிடிச்சிடுது... லவ் பண்ண ஆரம்பிச்சிடறார்... அவங்களும் இவரோட குறும்புத்தனத்தை ரசிச்சு லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க. காதல் பரிசா அவங்களோட டாலர் வெச்ச செயினை ஆர்யாவுக்கு பரிசா தர்றாங்க...

Joo-Hee படிச்சுட்டு இருக்கப்ப ஒரு சம்மருக்கு அவங்களோட கிராமத்துக்குப் போறாங்க.. அங்க Joon-Ha அப்படின்னு ஒருத்தர சந்திக்கறாங்க.. கிராமத்துல இருக்கும் போது Joo-Hee அங்க ஏரியைத்தாண்டி இருக்கற ஒரு பழைய வீட்டைப் பார்க்க ஆசைப்படறாங்க.. நம்ம Joon-Ha அவங்களோட ஆசைய நிறைவேத்தரார்.. அப்ப நடக்கற நிகழ்வுகள் அவங்களுக்குள்ள ஒரு நெருக்கத்த உண்டாக்கியிருக்கும்.. காதல் பரிசா அவங்களோட டாலர் வெச்ச செயினை ஆர்யாவுக்கு.. அச்சச்சோ இல்லல்ல Joo-Hee க்கு பரிசா தர்றாங்க...



அப்புறம் அவங்க லவ் வீட்டுக்கு தெரிஞ்சு ஆர்யாவோட தாத்தா அவங்க ஸ்டேட்டஸையும், ஜாதியையும் காரணமா வெச்சு இவங்க காதலை ஏற்க மறுக்கிறார். அதனால அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போலாம்னு முடிவு பண்ணிடறாங்க.. ஆனா ஆர்யா அவங்களுக்காக வெயிட் பண்ணி பாத்துட்டு அவங்க வராததால அவரோட போலீஸ் டிரெயினிங்குக்குப் போயிடறார். அங்கயும் அவர்கிட்ட போன்ல பேசறதுக்கு பிரீத்திகா முயற்சி பண்ணினாலும் அவங்க வராத கோவத்துல ஆர்யா பேச மறுத்திடறார்...

அந்த டிரெயினிங்ல கண்ணாடி போட்டுக்கிட்டு (ஒரு டவுட்டு.. போலீஸ் வேலைக்கு கண்ணாடி போட்டவங்களை செலக்ட் பண்ணுவாங்களா... சிரிப்பு போலீஸ்தான் கிளியர் பண்ணனும்) இருக்கற ஒருத்தர் ஆர்யாவுக்கு நண்பராயிடறார்.. அவரும் அவங்க அத்தை பொண்ணை லவ் பண்றதா சொல்றார்.. அவங்களுக்கு லவ் லட்டர்லாம் எழுதி போஸ்ட் பன்றதுக்காக ஆர்யாகிட்ட கொடுக்கிறார். அப்புறம் பிரீத்திகா ஆர்யாவைப் பாக்கறதுக்காக அந்த கேம்புக்கே வந்திடறாங்க.. அப்பதான் தெரியுது.. கண்ணாடி நண்பர் பத்து வயசுல இருந்தே லவ் பண்ணிட்டு இருந்த பொண்ணு நம்ம பிரீத்திகாதான்னு. ஆர்யாவும் அவங்களும் லவ் பண்றது தெரிஞ்சு அந்த கண்ணாடி நண்பர் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்றார். ஆர்யா அவரைக் காப்பாத்தி தன்னோட காதலிய அந்த நண்பருக்கு விட்டுக்கொடுத்திட்டு போயிடறார்...

Joon-Haக்கு ஒரு குளோஷ் பிரண்ட் இருக்கார்.. ரொம்ப நல்லவர்.. அவருக்குத்தான் முதல்லயே Joo-Heeய நிச்சயம் பண்ணியிருப்பாங்க.. ஆனா தன்னோட பிரண்டுக்கும் Joo-Heeக்கும் ஏற்கனவே காதல் இருக்கறத் தெரிஞ்சுக்கற அவர் பொண்ணோட வீட்ல அவரோட பேர யூஸ் பண்ணி ரெண்டு பேரும் மீட் பண்றதுக்கு ஏற்பாடு செய்வார்.. அப்புறம் நாம இருந்தா அவங்க ரெண்டு பேரும் சேரமுடியாதுன்னு தற்கொலைக்கும் முயற்சி பண்றார்.. ஆனா அவர Joon-Ha காப்பாத்திடறார்.. அப்புறம் Joon-Ha அப்போ நடக்கற வியட்நாம் போருக்குப் போயிடறார்.

அப்புறமென்ன... அப்பா ஆர்யாவோட ஃபிளாஷ்பேக்குக்கும் ஷ்ரேயாவுக்கும் அவங்களுக்கே தெரியாத ஒரு தொடர்பு இருக்கு.. அது என்னங்கறது சஸ்பென்ஸ்..... ஆனா அந்த சஸ்பென்ஸ் படத்துல யார் முகத்துல அதுக்குத் தகுந்த அதிர்ச்சி இல்ல.. அதுக்குத் தகுந்த இசை இல்ல...

2003 ஆம் வருசம் வெளியான கிளாசிக் அப்படிங்கற கொரியப் படத்தை அப்படியே சுட்டிருக்கார் இந்த மணிகண்டன்...

படம் பாக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே... ஆஹா அந்தப் படத்தை நம்ம மொழில பாக்கப் போறோம்னு நினைச்சேன்.. ஃபிளாஸ்பேக்ல வர்ர லவ்.. ரியல்ல வர்ர லவ் ரெண்டுமே நல்லா டச்சிங்கா இருக்கும் கொரியன் மூவில...மொழி புரியாமலேயே அந்தப் படம் பார்க்கும் போது ஒரு நல்ல ஃபீல் கொடுத்தது... ஆனா தமிழ்ல.. எரிச்சல்தான் வருது... காபியடிக்கறதுன்னு எல்லா டைரக்டர்ஸும் முடிவு பண்ணிட்டீங்க.. தயவு செஞ்சு அதையாவது ஒழுங்கா பண்ணுங்கப்பா....

சந்தானம் ஓரிரு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஹரிஹரன் சார் பாட்டு பாடறதோட நிறுத்திக்கலாம்... பின்னனி இசை பிரவீன்மணி பண்ணிருக்கார்... முக்கியமான காட்சிகள்ல கூட ரொம்ப மோசமான இசை.. பாடல்களும் ஒன்னும் தேரலை....

மொத்தத்தில் சிக்கு புக்கு - திருட்டுச் சரக்கு ரயில்.

Thursday, December 02, 2010

கண்கள் இரண்டால் - சிறுகதை

"ஏண்டா மச்சி.. ஜாலியா ஒரு நாள் கிளாஸை கட்டடிச்சுட்டு அங்க போய் ஓபி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்ட இல்லியா" -நண்பன் கோவிந்த்.

"இல்லடா கிளாஸைக் கட்டடிக்கனும்னா எதுக்குடா அங்க போய் உட்காரனும்.. நீட்டா தியேட்டர் போயிட மாட்டேனா. அட்டெண்டண்ட்ஸ் லேக் ஆனாதான் பிராப்ளம் இல்லியே. காசு கட்டினா முடிஞ்சது மேட்டர்"

மீண்டும் தொடர்வேன் என என் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான் கோவிந்த்.

"உண்மையிலேயே அந்தப் பசங்களுக்கு உதவி செய்யனும்னுதான் மச்சான் போறேன். இந்த மாதிரி கண் தெரியாத பசங்களுக்கும் இதே பாடமுறை, தேர்வுமுறை வெச்சிருக்கறதே தப்புடா மச்சான். அவங்களால நம்ம அளவுக்கு படிக்க முடியுமா? இல்ல இந்த மாதிரி வேற ஒரு உதவியாளர வெச்சி தேர்வு எழுதினா... அதுல அவங்களோட திறமை எப்படி வெளிப்படும்? அதுவும் நான் அந்தப் பையனுக்கு உதவி செய்யறதா ஒத்துக்கிட்டது கணித பாடத்துக்கு. எனக்கு கணக்கு நல்லா வரும்னு உனக்கே தெரியும். அதான்... நீட்டா அந்தப் பையன கொஞ்ச நேரம் சும்மா உக்காரு தம்பின்னு சொல்லிட்டு. நானே எக்சாம் எழுதிக் கொடுத்திட்டு வரலாம்னு ஐடியாடா"

"என்னவோடா ஒரு கண் தெரியாத பையனுக்கு ஹெல்ப் பண்றங்கற அதனால உன்ன ஓட்ட முடியலை. போய்ட்டு வா. முடிஞ்ச வரை நல்லா ஹெல்ப் பண்ணு. சொதப்பி வெச்சி.. பாஸாக இருந்த பையனை ஃபெயிலாக்கிடாத" என்றான். நான் முறைத்தேன். சிரித்தான்.

"போடா போடா.. சேவை செய்யறவன் கோவிச்சுக்கக் கூடாதுடா" என்றான்.

நான் கல்லூரியில் B.Sc இரண்டாமாண்டு மாணவன். கண் தெரியாத மாணவர்களுக்கு நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக, அந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக எதாவது கல்லூரியில் இருந்து மாணவர்களைக் கேட்பார்கள். இந்த வருடம் எங்கள் கல்லூரியிலும் கேட்டார்கள். அதற்குப் போவதாய் ஒத்துக்கொண்டேன் நான். இதோ நாளை அங்கு செல்லப் போகிறேன். கண்ணாமூச்சி விளையாட்டுல கொஞ்ச நேரம் கண் கட்டியிருந்தாலே நமக்கு எப்படா அந்தத் துணியை அவிழ்ப்போம்னு ஆயிடுது.. ஆயுள் முழுக்க கண்கள் கட்டப்பட்ட அந்த சிறுவனோட நிலைய நினைச்சுப் பாருங்க. பாவம் அந்தக் கண் தெரியாத பையன் என்ன படிச்சிருக்க முடியும். அவனுக்கு உதவி செய்ய நான் ஒத்துக்கொண்டது சரிதானே.

------------------------------------------

அந்த அறையில் தரையில் பத்தடி இடைவெளியில் அனைத்து மாணவர்களையும் அமரச் செய்திருந்தனர். அவர்கள் செய்கைகளைப் பார்க்கும் போதே மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்த மாணவர்களில் சிலர் தலையை நேராக வைக்கக் கூட சிரமப்பட்டுக்கொண்டு இருந்தனர்.

என்ன வாழ்க்கைடா இது இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா?

அப்படி ஒருவன் இருந்தால்.. ஒரு பாவமும் அறியாத இந்தப் பிஞ்சுகளுக்கு இந்த நிலை நேர்ந்திருக்குமா? மனசு கணத்தது...

"சார்.. சார்.."

ஒரு ஆசிரியை என்னை சார் என அழைத்து என் நினைவைக் கலைத்தார்..

ஆ நம்மளயா சார்னு கூப்பிடறாங்க.... ஒரு நிமிசம் தடுமாறினேன்...

"ம் சொல்லுங்க"

"சார் இவன் பேரு ஆறுமுகம். இவனுக்குதான் நீங்க எக்ஸாம் எழுதித் தரணும்." என்று என்னிடம் சொன்னவாறே.

"ஆறுமுகம் சாருக்கு வணக்கம் சொல்லு"

"வணக்கம் சார்"

"வணக்கம்ப்பா சார்னு கூப்பிடாத அண்ணான்னு கூப்பிடு"

"சரிங்கண்ணா" என்றான் சிரித்துக் கொண்டே. அந்த சிரிப்பை என்னால் ரசிக்க முடியவில்லை. ஏனோ வலித்தது மனது.

"சரிங்க சார் நீங்க அங்க போய் உக்காருங்க. தரைலதான் சார் உக்காந்து எக்ஸாம் எழுதனும். கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்க சார்." என்று என்னிடம் சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் அவனிடம் திரும்பினார்.

"என்ன ஆறுமுகம் எல்லாத்தையும் மறக்காம எடுத்துக்கிட்டு வந்திட்டியா"

"எடுத்திட்டு வந்திட்டேன் மேடம். நான் ரெடியா இருக்கேன் மேடம்" என்றான்.

அந்தப் பையனைப் பார்க்க பாவமாக இருந்தது. பாவம் இந்தப் பையனுக்கு நாம் நிச்சயம் உதவ வேண்டும். பத்தாம் வகுப்பு கணிதப் புத்தகத்தை இந்த மூன்று நாட்களாக புரட்டி வந்தது நல்லதாய் போயிற்று என நினைத்துக் கொண்டேன்.

தேர்வு நேரம் ஆரம்பித்தது.. அந்தச் சிறுவன் மிகவும் துடிப்பானவனாக இருந்தான்.. தேர்வுக்குத் தேவையான காம்பஸ், பென்சில், பேனா ரப்பர் எல்லாத்தையும் அவன் கைக்கு வசதியான இடத்தில் எடுத்து வைத்தான்.

"தம்பி இருப்பா.. நான் அதெல்லாம் எடுத்துக்கறேன்பா.. நீ ஏன் சிரமப்படறே"

"உட்காந்து செய்யற இந்த வேலையே சிரமமா? என்னன்னா சொல்றீங்க. என்னால பாக்க மட்டும்தான்னா முடியாது. நான் சொல்றத மட்டும் செய்யிங்கன்னா... இல்லன்னா மூனு மணி நேரம் பத்தாது." என்றான்.

பொட்டிலடித்தார் போல் என்னைத் தாக்கியது அவன் கேள்வி.

கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது.

"அண்ணா அதுல வலது மூளையில. எல்.ஆறுமுகம்னு என் பேர் எழுதுங்க. அப்புறம். ஆன்ஸர் சீட்ல அதே மாதிரி வலது மூளையில.  என் பெயர், என்னோட ரிஜிஸ்ட்ரேசன் நம்பர், பாடம், தேதி இதெல்லாம்.. அடுத்தடுத்து இருக்கும்" அதை ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணிடாம கவனமா ஃபில் பண்ணுங்கண்ணா.."

என்ன இவன் இதையெல்லாம் எனக்கு சொல்லித் தருகிறான் என சற்றே எரிச்சலுற்றேன்.

"அப்புறம் கேள்வித்தாள்ல மேல கணிதவியல்னு போட்ருக்கா. பாத்தீங்களா. அதுக்கு கீழ என்ன இருக்குன்னு படிங்கண்ணா.."

ரொம்ப ஓவரா போறானே. இந்தப் பையன். எதை எதைல்லாம் பாக்க சொல்றான் பார் இந்தப் பையன். என என் ஈகோ அந்தப் பையனைத் திட்டியது.

நான் மெளனமாக கேள்வியைப் படிக்க ஆரம்பித்தேன்.

"அண்ணா என்ன பன்றீங்க"

"கேள்வியப் படிச்சிட்டு இருக்கேண்டா"

"அண்ணா... நீங்களே படிக்கறதுல என்ன யூஸ்னா?  எனக்கு படிச்சுக் காமிங்க. அதுக்கு நான் பதில் சொல்றேன். சொல்லச் சொல்ல எழுதுங்க. சுறுசுறுப்பா இருங்கண்ணா. ரொம்ப ஸ்லோவா இருக்கீங்க நீங்க. டைம் பத்தாம போயிடும் அப்புறம்"

எனக்கு ஆத்திரம் எல்லை மீறியது. கட்டுப்படுத்திக் கொண்டே அவனுக்கு படித்துக் காட்ட ஆரம்பித்தேன். படிக்க படிக்கவே இதற்கு என்ன பதில் வரும் என யோசிக்க ஆரம்பித்தேன்.

படித்து முடிக்கும் முன்பே சட்டென பதில் வந்தது அவனிடம் இருந்து.

அந்த நிமிடம் முதல் முழுமையாக என்னை ஆட்சி செய்தான். என்னால் ஒரு புள்ளியைக் கூட கூடுதலாக அந்த விடைத்தாளில் வைக்க முடியவில்லை. அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வை முடித்தான்.

"சரின்னா இப்ப பேப்பரையெல்லாம்.. ஒழுங்கா ஆர்டர் மாறாம அடுக்குங்கண்ணா.. மாத்திக் கட்டிடாதீங்க.. பாத்து ஜாக்கிரதையா செய்ங்க"

அவன் மொழி புரிய ஆரம்பித்திருந்தது. அதனால் இப்போது கோபம் வரவில்லை.

கண் தெரியும் என்னைவிட அவன் வேகமாக செயல்பட்ட விதம். எனக்குத் தேவை உன் கண்தாண்டா... உன் மூளையில்லை என்பதாய் அவன் நடந்து கொண்ட வேகம் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

நேரத்தை சரியாய் கணக்கிட்டு அவன் செயல்படும் விதம் கண்டு என்னை நினைத்து நானே முதல் முறையாய் வெட்கப்பட்டேன்.

என் அகங்காரம், கண் தெரியாதவன் தானே இவனுக்கு என்ன தெரியப் போகிறது நாம்தான் அவனுக்காக பாஸாக்க வேண்டும் என்று நினைத்திருந்த என் இறுமாப்பு என என் கண்ணைக் கட்டியிருந்த விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து விழ ஆரம்பித்தன.

எனக்கு கண் தெரிய ஆரம்பித்தது.

Tuesday, November 23, 2010

கார்ப்பரேட் இந்தியா..!

 மத்தியில் திமுக குடும்பத்தினருக்கு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக திமுக குடும்பத்தினருக்கு பதவி கிடைக்கக் கூடாது (காங்கிரஸ் கோஷ்டிகளைவிட திமுகவோட குடும்ப கோஷ்டி இப்ப அதிகமாயிடுச்சே) என்பதற்காக அவர்கள் செய்த தகிடு தித்தங்கள். ஆடியோ டேப்பாக இப்போது வெளிவந்திருக்கிறது. அதனை தெளிவாக தமிழ்படுத்தி உண்மைத்தமிழன் - சரவணன் இந்த இணைப்பில் http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_9136.html எழுதியிருக்கிறார். கொஞ்சம் பெரிய பதிவுதான். ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அதனால் கொஞ்சம் பொறுமையாக முழுதாகப் படியுங்கள்.
 கீழே நான் குறிப்பிட்டிருக்கும் விசயங்கள் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

1. திமுகவுக்குள் இருக்கும் குடும்பச் சண்டை.
2. குடும்பத்தில் அனைவரும் சென்று கும்மியடிக்கும் அளவு செல்வாக்கு பெற்ற முதல்வர். குடும்ப நலனிற்காக மட்டுமே மத்திய அரசை பயன்படுத்துவது.
3. மத்தியில் உண்மையில் ஆளுவது கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்களே.
4. ஊடகங்கள் (செய்தித்தாள், தொலைக்காட்சி) கைப்பாவையாக செயல்படுவது.
5. இதெல்லாம் பெரிய விசயமே இல்லை என நாம் நினைப்பது.
 

தொலைத் தொடர்புத் துறையில் மொபைல் பேசுவதிலும், இணைய இணைப்புப் பெறுவதிலும் நாம் படும் அல்லல்கள், அடையும் பண இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இந்திய அரசாங்கமே அவர்கள் கையில்.. நாம் ஒன்றும் செய்ய முடியாது.. என்று நன்கு தெரிந்ததால்.. நாம் தெரிந்தே ஏமாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நம் இந்தியா மாதிரி ஒரு ஜனநாயக நாடு உலகில் இல்லை என்று நாம் பெருமை கொள்கிறோம். ஆனால் நம் இந்தியா ஜனநாயக நாடு அல்ல. இந்தியாவை உண்மையில் ஆளுவது கார்ப்பரேட் முதலாளிகள்தான்.

நமக்கு எதுவும் முக்கியமில்லை. நமக்கு இலவசமாக எதாவது பொருள் கிடைத்தால் சரி. எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன நம்ம தலைல குண்டு விழலை என்று கண்ணி வெடியின் மீது அமர்ந்து கொண்டு நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாள் நிச்சயம் அடியில் இருக்கும் கண்ணி வெடி வெடிக்கும் அப்போது அழுவோம். அதுவரை....

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று..


Wednesday, November 17, 2010

ஆறிலிருந்து முப்பது வரை - நான் ரசித்த ரஜினி படங்கள்

ரஜினிகாந்தோட படங்கள்ல எனக்கு நிறைய படம் புடிக்கும். இந்த தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் அருண்பிரசாத்துக்கு (சுற்றுலா விரும்பி) என்னோட நன்றி. இங்க இந்த தொடர்பதிவ நிறைய பேர் எழுதிட்டதால.. எப்படியும் யாரும் படத்தோட டைட்டில மட்டும் படிச்சுட்டு மேட்டரை விட்டுடுவீங்க. அதனால என்னோட ஆறு வயசுல இருந்து இந்த 30 வயசு வரைக்கும் எனக்குப் புடிச்ச ரஜினி படத்து பேரையும் அதுல எனக்கு புடிச்ச பாட்டையும் மட்டும் இங்க நான் குறிப்பிடறேன்...


1.

வேலைக்காரன்

பாடல்கள்: வேலை இல்லாதவன்தான்...., பெத்து எடுத்தவதான்...
இசை: இளையராஜா.

ராஜா சின்ன ரோஜா

பாடல்கள்: ஒரு பண்பாடு இல்லையென்றால்..., பூ பூபோல்..., சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...
இசை: சந்திர போஸ்.

தில்லு முல்லு

பாடல்கள் எதுவும் பிடிக்காது ஆனா படத்தோட பின்னனி இசை சுறுசுறுப்பா இருக்கும் அதனால அது பிடிக்கும். இசை: எம்.எஸ்.வி


2.

பாட்ஷா
பாடல்: தங்கமகன் இன்று...
இசை: தேவா

முத்து
பாடல்கள்: ஒருவன் ஒருவன்.., விடுகதையா...
இசை: ஏ.ஆர். ரகுமான்

அண்ணாமலை

பாடல்கள்: வெற்றி நிச்சயம்...., ஒரு பெண் புறா...., ரக்ககட்டி பறக்குது...
இசை: தேவா


3.

தளபதி
பாடல்கள்: சின்னத்தாயவள்....., யமுனை ஆற்றிலே..., புத்தம் புது....
இசை: இளையராஜா.

படிக்காதவன்.

பாடல்கள்: ஜோடி கிளி எங்கே..., ஒரு கூட்டுக் கிளியாக...., ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்...
இசை: இளையராஜா..

மாப்பிள்ளை

பாடல்கள்: என்னதான் சுகமோ...., என்னோட ராசி நல்ல....
இசை: இளையராஜா

4.

படையப்பா

பாடல்கள்: வாழ்க்கையில் ஆயிரம்....
இசை: ஏ.ஆர். ரகுமான்..

(உண்மையில் முத்துவில் இந்த கூட்டணியில் பாடல்கள் மிக நன்றாக அமைந்ததால் மிகவும் எதிர்பார்ப்போடு இருந்தேன். ஏமாற்றமே...)

சந்திரமுகி

படம் மட்டும்தான் பிடிக்கும். பாடல்கள் எதுவும் பிடிக்காது.வித்யாசாகர் ரஜினி படத்திற்கு இசையமைக்க கிடைத்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார்.

உழைப்பாளி


பாடல்கள்: ஒரு மைனா மைனா...
இசை: இளையராஜா.


5.

அருணாச்சலம்

பாடல்கள்: தலை மகனே கலங்காதே...
இசை: தேவா


பில்லா

பாடல்கள்: மை நேம் இஸ் பில்லா...
இசை: எம்.எஸ்.வி

நினைத்தாலே இனிக்கும்

பாடல்கள்: எங்கேயும் எப்போதும்...
இசை: எம்.எஸ்.வி

6.

முள்ளும் மலரும்

பாடல்: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...
இசை: இளையராஜா.

இளமை ஊஞ்சலாடுகிறது

இருவருக்காகவும் பிடிக்கும் (ரஜினி, கமல்)

பாடல்: ஒரே நாள் உனை நான்....
இசை: இளையராஜா.

மிஸ்டர் பாரத்

பாடல்: காத்திருக்கேன் கதவத் தொறந்து..., என் தாயின் மீது...
இசை: இளையராஜா.

7.
தர்மத்தின் தலைவன்

பாடல்கள்: முத்தமிழ் கவியே வருக..., தென்மதுரை வைகை நதி...
இசை: இளையராஜா

குரு சிஷ்யன்

பாடல்கள்: வா வா வஞ்சி இளமானே....
இசை: இளையராஜா

மனிதன்

பாடல்கள்: வானத்தை பார்த்தேன்.., ஏதோ நடக்கிறது...
இசை: சந்திரபோஸ்

8.

நான் அடிமை இல்லை

பாடல்கள்: ஒரு ஜீவன் தான்....,
இசை: விஜய் ஆனந்த்.

நல்லவனுக்கு நல்லவன்

பாடல்கள்: சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு..., முத்தாடுதே..., உன்னைத்தானே..., வச்சுக்கவா உன்ன மட்டும்....
இசை: இளையராஜா.

தம்பிக்கு எந்த ஊரு

பாடல்கள்:
காதலின் தீபம் ஒன்று....
இசை: இளையராஜா.

9.

நான் மகான் அல்ல

பாடல்கள்: மாலை சூடும் வேலை...
இசை: இளையராஜா.

தங்க மகன்

பாடல்கள்: ராத்திரியில் பூத்திருக்கும்....., அடுக்கு மல்லிகை....
இசை: இளையராஜா.

மூன்று முகம்

படம் மட்டுதான் பிடிக்கும்.


10.


ப்ரியா

பாடல்கள்: ஏ பாடல் ஒன்று..., டார்லிங் டார்லிங் டார்லிங்..., என்னுயிர் நீதானே....
இசை: இளையராஜா.

கை கொடுக்கும் கை

பாடல்: தாழம் பூவே வாசம் வீசு...
இசை: இளையராஜா.

புதுக்கவிதை

பாடல்கள்: வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது.....
இசை: இளையராஜா.


பின்குறிப்பு: கடுமையான போட்டியின் காரணமாக ஒவ்வொரு இடத்திலும் மூன்று படங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

அப்புறம்.. இதனைத் தொடர்வதற்கு நண்பர் பதிவுலகில் பாபுவை அன்புடன் அழைக்கிறேன்....

Tuesday, November 02, 2010

வியாபாரி மனசு - சிறுகதை

எனக்கு அப்போது ஒரு 12 வயது இருக்கும்... வீட்டில் கட்டிலுக்கு அடியில் அட்டை பெட்டிகள் நிறைய பட்டாசாய் நிறைந்திருந்தது.

அடிக்கடி அதை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டேன்.

"அம்மா இதுல இருக்கறதை நான் வெடிக்கலாமா?"

"நீ வெடிக்காமயா வெடிடா... ஆனா நம்ம கடை இங்க இருக்குது இல்லியா. அதனால தூரமா போயி வெடி" என்றார்.

தீபாவளிக்கு நம்ம வீட்டு முன்னாடி பட்டாசு வெடித்து நம் வீட்டு முன்பு வெடித்த பட்டாசு குவியல்கள் இருப்பதைப் பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி. எங்கோ போய் பட்டாசு வெடிப்பதில் என்ன இருக்கிறது. அம்மா அப்படி சொன்னதற்கு நான் எதுவும் சொல்லவில்லை.

கடையில் தீபாவளி விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அதனை சென்று வேடிக்கை பார்த்தேன். தீபாவளி நெருங்க நெருங்க... இரவிலும் கடை முழுதாக திறந்திருந்தது.

வீட்டில் இரவு நேரங்களில் மாற்றி மாற்றி கடையில் அமர்ந்திருப்பார்கள்.

எனக்கு தூங்காமல் அப்படி அவர்களுடன் அமர்ந்திருப்பது பிடித்திருந்தது. தீபாவளி அன்று மதியம் வரையில் எங்களது பட்டாசு கடையில் விற்பனை இருந்தது.

பட்டாசுகள் வரிசையாக மர ரேக்குகளில் அழகாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. தீபாவளி அன்று வந்து வாங்குவது பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளாக இருந்தனர். அன்று மிகவும் குறைந்த விலையில் பட்டாசு விற்கப்பட்டது.

அம்மாவும் கடையில் நின்று வாங்க வருபவர்களுடன் வரும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் எதாவது ஒரு பட்டாசு பாக்கெட்டை கூடுதலாக எடுத்துக் கொடுத்தார்.

எனக்கு அது பிடிக்கவில்லை. மர ரேக்குகளில் பட்டாசுகள் குறைய குறைய எனக்கு கஷ்டமாக இருந்தது. என்ன இந்தம்மா சும்மாவே அதுங்களுக்கு எடுத்துக் கொடுக்கறாங்களே.  அதோட விலையே 15, 20 ரூபா ஆகுதே என்று நினைத்தேன்.

அது எப்படி அம்மாவுக்கு புரிந்ததோ தெரியவில்லை.

"பாவம் சின்னப்பசங்க நேத்து வரைக்கும் பட்டாசு அப்பா வாங்கித் தருவாரோ மாட்டாரோன்னு ஏங்கி இருக்கும்ங்க. இப்ப கூட தீபாவளி அன்னைக்குதான் வாங்கித்தந்தாருன்னு ஒரு நினைப்பு மனசுல இருக்கும். இப்ப அதுங்களுக்கு ஒரு சின்ன சந்தோசம். இன்னிக்கு வந்ததால இது நமக்கு ஃப்ரியா கிடைச்சதுன்னு அதான்" என்றார் பொதுவாக.


அப்ப நான் மட்டும் சின்னப்பையன் இல்லியா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

கடையில் இப்போது எதுவுமே இல்லை. எல்லாமே விற்றும், இலவசமாகக் கொடுக்கப்பட்டும் தீர்ந்துவிட்டது.

பட்டாசுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மர ரேக்குகள் காலியாகக் கிடந்தன.

ஓடிப்போய் கட்டிலுக்கு அடியில் பார்த்தேன் வெறுமையாய் இருந்தது.

அதனைப் பார்ப்பதற்கு எனக்கு என்னவோ போல் இருந்தது. என் மனசும் வெறுமையானது.

அதுவரை உழைத்து மிகவும் களைத்துப் போய் குடும்பத்தில் எல்லோரும் படுக்க இடம் கிடைத்தால் போதும் என சென்று படுத்தனர்.

எனக்கு படுக்கவும் பிடிக்கவில்லை. கண்ணில் என்னையும் மீறி மெலிதாக கண்ணீர். அப்புறம் என்னையும் அறியாமல் தூங்கிப் போனேன்.

மாலையில் அம்மா என்னை எழுப்பிவிட்டார்.

"போடா நாலு மணி ஆயிடுச்சு போய் குளிச்சி இந்த புது சட்டைய போட்டுட்டு வா" என்றார்.

எனக்கு வெறுப்பாக இருந்தது. புது சட்டையை போட்டு என்ன பண்றது என்று நினைத்தவாறே அமர்ந்திருந்தேன். அம்மா என்னை இன்னொரு முறை மிரட்டினார். அதனால் சென்று குளித்துவிட்டு வந்தேன்.

வந்து புது சட்டை போட்டபிறகு...

அம்மா பீரோவில் இருந்து ஒரு கவரை எடுத்துப் பிரித்தார். அதில் நான் கடையில் ஆசையாய் தொட்டுப் பார்த்த பட்டாசுகள் அனைத்தும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன.

அதனைப் பார்த்தவுடன் எனக்கு மனசு மகிழ்ச்சியால் துள்ளியது. ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிக் கொண்டேன். கண்களில் என்னையும் மீறி மீண்டும் கண்ணீர். அம்மா என்னைப் புரிந்தவராய் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

அந்த பட்டாசுகளை எடுத்துச் சென்று காலியாகக் கிடந்த மர ரேக்கில் வரிசையாக அடுக்கினேன்.

மனசு நிறைவாய் இருந்தது.

Sunday, October 31, 2010

PAN'S LABYRINTH (2006) - திரை விமர்சனம்


ஒஃபீலியாங்கற 11 வயசு பொண்ணு கர்ப்பமா இருக்கற தன்னோட அம்மாவோட பயணம் செய்யறதோட கதை ஆரம்பிக்குது. அந்த பொண்ணுக்கு தேவதைக் கதைகள்னா அவ்வளவு இஷ்டம். தேவதைக் கதைகள் அடங்கிய புத்தங்களை எப்பவும் படிச்சிக்கிட்டே இருக்கு.

அந்த பொண்ணோட அப்பா இறந்துடறாரு. அதுக்கப்புறம் அவங்கம்மாவ ஸ்பெயின்ல அப்ப (1944 ஆம் வருசம்) கேப்டனா இருக்கற விடால் கட்டிக்கறாரு. அவர்கிட்டதான் இப்ப அவங்க போய்கிட்டு இருக்காங்க. அங்க போனவுடனே அந்த பொண்ணுக்கு அதோட வளர்ப்புத் தந்தையையும் அந்த இடமும் கொஞ்சம் கூட பிடிக்கலை.

அந்த கேப்டன் விடால் சர்வாதிகாரியா இருக்கார்... அந்த கால கட்டத்துல இருந்த கலகக்காரங்களை கொடூரமா துன்புறுத்தறதுல ஆர்வம் உடைய ஆளா இருக்கார். அந்த வீட்டுக்கு பக்கத்துல தேவதையோட உதவியோட அந்த பொண்ணு ஒரு அபாயகரமான குழியைப் பாக்கறா...

அந்தக் குழிக்குள்ள பான் அப்படிங்கற ஃபான் (Faun - கொம்பும் வாலும் கொண்ட தெய்வம்) இருக்கு. அது ஓஃபீலியாவ பார்த்தவுடனே சந்தோசமாயிடுது. அது ஓஃபீலியாகிட்ட நீ முந்தின பிறவியில மோன்னா அப்படிங்கற இளவரிசியா இருந்த. இது உன்னோட கடைசி பிறவி. நான் சொல்ற மூனு கஸ்டமான விசயங்களை வெற்றிகரமா அடுத்த வர இருக்கற பெளர்ணமிக்குள்ள பண்ணி முடிச்சிட்டா. நீ பிறவிப்பயனை அடைஞ்சுடலாம். உன்னோட வாழ்க்கைல இருக்கற கொடூரமான சம்பவங்கள்ல இருந்து விடுபட்டுடலாம்னு சொல்லுது.

அந்த பொண்ணு அதை வெற்றிகரமா முடிச்சி பிறவிப்பயனை அடைஞ்சாளான்றதை அருமையான திரைக்கதையா சொல்லி இருக்காங்க.

எழுத்துல படிக்கும் போது ரொம்ப சாதாரணமா தெரியற இந்தக் கதைய விசுவல்ல அவங்க காமிச்சிருக்க விதம்.. சான்சே இல்லைங்க.. ரொம்ப அருமையான திரைக்கதை, எடிட்டிங், ஆர்ட் ஒர்க், கிராபிக்ஸ். அப்புறம் இசை.. கிளைமேக்ஸ்ல வர இசை ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதா இருக்கும். எடிட்டிங் ரொம்ப ரசிக்கற விதமா இருந்தது. நீங்க பார்த்தாதான் அது உங்களுக்குப் புரியும்.

அடிக்கடி அம்மா வயித்துல இருக்கற தன்னோட தம்பிகிட்ட அந்த பொண்ணு பேசற காட்சிகள் வரும் அதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை... வயித்துக்குள்ள இருக்கற அந்தப் பையன்கிட்ட.. நம்ம அம்மா ரொம்ப நல்லவங்க.. நீ பொறக்கும் போது அவங்களுக்கு அதிகம் சிரமம் கொடுத்திடாத அப்படின்னு கெஞ்சிக் கேட்கிற சீன் பயங்கற டச்சிங்கா இருக்கும்.

முதல் டாஸ்க்க அந்தப் பொண்ணு செய்யறதைப் பாக்கும் போது பயங்கர பிரம்மிப்பா இருக்கும்... அந்த டாஸ்க்குக்கு பண்ணியிருக்கற கிராபிக்ஸ்லாம் பக்கா...

இரண்டாவது டாஸ்க்குல பான் எவ்வளவோ எச்சரிக்கை பண்ணியும் அந்தப் பொண்ணு ஆசையே துன்பத்துக்குக் காரணம் அப்படிங்கற கான்செப்ட் படி ஒரு தப்பு பண்ணிடும்.
 அதுல இருந்து அந்தப் பொண்ணு தப்பி வர்ர சீன் ரொம்ப நல்லா இருக்கும். ஆனா தப்பிச்சி வந்துட்டாலும் அந்த பொண்ணுக்கு துணையா வந்த மூனு தேவதைகள்ல இரண்டு தேவதைகளை இழந்திடுவா. இந்த மாதிரி தப்பு பண்ணிட்டதால பான் கோவிச்சுக்கிட்டு அந்தப் பொண்ண விட்டுட்டு போயிடும்.

அதுக்கப்புறம் அவங்கம்மா பிரசவத்துல அவ தம்பி பிறந்தவுடனே இறந்திடுவாங்க. ஆதரவா இருந்த வேலைக்காரி அந்த இடத்தை விட்டு உடனே போக வேண்டிய நிலைமை. பொண்ணு தனியா என்ன பண்றதுன்னே புரியாம தவிச்சிட்டு இருக்கும்.

அப்ப மறுபடியும் அந்த பான் வந்து அவளுக்கு கடைசி சான்ஸ் கொடுக்கும்.. இன்னும் மூனு நாள்தான் இருக்கு பெளர்ணமிக்கு அதுக்குள்ள அந்த அபாயகரமான குழிக்குள்ள உன் தம்பியைக் கொண்டு வா ஏன் எதுக்குன்னு எல்லாம் கேட்காத... அங்க உனக்கு மூனாவது டாஸ்க்க சொல்றேன்னு சொல்லும்.

இந்தப் பொண்ணும் கஷ்டப்பட்டு தன்னோட தம்பிய அங்க தூக்கிட்டு போவா. அங்க போனா.. அந்த பான்... அவளோட தம்பியோட இரத்தத்தை அந்த இடத்துல விட்டாக்கா நீ பிறவிப்பயனை அடைஞ்சுடுவன்னு சொல்லுது. இவ அதுக்கு மறுத்துடுவா.. தம்பி என் கூடதான் இருக்கனும்னு சொல்லிடுவா....

அந்த நேரத்துல அவளைத் தேடிக்கிட்டு அவங்கப்பா சர்வாதிகாரி விடால் அங்க வருவாரு... அதுக்கப்புறம் வர்ர கிளைமாக்ஸ் ரொம்ப அதிர்ச்சியானதா இருக்கும்.
படம் பார்த்து முடிச்சவுடனே மனசு முழுக்க அந்த 11 வயசு பொண்ணுதான் இருப்பா... அந்தப் பொண்ண சுத்தியேதான் கதை... அந்தப் பொண்ணும் ரொம்ப நல்லா நடிச்சிருக்கு...

இந்தப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பானிஷ் மொழிப்படம். மூனு ஆஸ்கார் விருத வாங்கிருக்கு அதோட ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவிச்சிருக்கு. இந்தப் படத்தப் பார்த்துட்டு விமர்சனம் எழுதலாம்னு இது பத்தின மத்த தகவல்களுக்காக கூகுள்ள தேடும் போது.. இந்தப் படத்தோட வெப்சைட் கண்ல பட்டுச்சு... அதை ஒரு தடவை பாருங்க. இந்தப் படம் பார்க்கனும்ங்கற ஆசை தானா வந்திடும் உங்களுக்கு..

Thursday, October 28, 2010

மனதோடு - சிறுகதை

விடியற்காலையிலேயே அந்த கிராமம் சோகமுகம் காட்டியது.

நேற்று வரை கந்தசாமி என்று அழைக்கப்பட்ட 48 வயதான அந்த நபர் வாய்பிழந்து இறந்து கிடந்தார். தலை பலமாக தாக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து இரத்தம் கசிந்து உறைந்திருந்தது. ஈக்கள் மும்முரமாக அவற்றின் பணியினை அந்த வீட்டில் செய்து கொண்டிருந்தன. 

கந்தசாமியின் மனைவி அழுதழுது ஓய்ந்து போய் அமைதியாக சுவரோரம் தலையை சாய்த்து அமர்ந்திருந்தார்.

"சொல்லும்மா என்ன ஆச்சு" இன்ஸ்பெக்டர் விசாரனையைத் துவக்கினார்.

"சார் ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கும் என் புருஷனுக்கும் தகராறு சார். அதனால பக்கத்து தெருல இருக்கற என் பொண்ணு வீட்டுக்கு போயிட்டேன் சார். இன்னிக்கு விடிகாலைல இப்படி ஒரு நியூஸு சார்."

என்று விசும்பினார். அழுகை மெலிதாக எட்டிப்பார்த்தது.

"சரி ஏன் உன் புருசனை கொன்ன சொல்லு"

அவள் ஓவென்று அழ ஆரம்பித்தாள். புருசன் இறந்ததற்கு அலட்டிக்கொள்ளாத அவள் இப்படி இன்ஸ்பெக்டர் கேட்டவுடன். மிகுதியாக அதிர்ந்தாள். அருகில் இருப்பவர்கள் யாராவது துணைக்கு வரமாட்டார்களா என பார்த்தாள்.

"சார் சார். நான் எதுக்கு சார் என் வூட்டுக்காரர கொலை பண்ணனும். அவருக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு வரும்தான் சார். ஆனா கொலை பண்ற அளவுக்கு எல்லாம் எனக்கு தைரியம் கிடையாது சார்"

"உன் புருசன் என்ன பண்ணிட்டிருந்தார்"

"செங்கல் சூளையில வேலைக்கு போயிட்டு இருந்தார் சார்."

"அங்க எதாவது தகராறு"

"எப்பவும் யார் கிட்டயாவது தகராறு பன்ற ஆளுதான் சார் என் புருசன். தெரியலை சார் என்னாச்சுன்னு"

இன்ஸ்பெக்டர் அவரது விசாரனையின் அடுத்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதே நேரம்.. அந்தத் தெருவின் மூலையில் இருந்த கோவிலில் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தான் அவன்.

அவன் வேறு யாருமல்ல இவன் தான்......

"என் பேரு கனேசனுங்க.. எனக்கு பதினைஞ்சு வயசு ஆகுது. கடந்த ஒரு வருசமா என்னைய பைத்தியம்னு இந்த ஊர் சொல்லிட்டு இருக்கு. சின்னப்பசங்கல்லாம் என் மேல கல்லடிச்சு விளையாடுவாங்க. ஆனா இந்த ஜனங்கதாங்க பைத்தியம். எல்லாம் காமப்பிசாசுங்க. என்னடா இந்த வயசுப்பையன் பேசுற பேச்சாடா இது. என்னடா பேசுற வயசுக்குத் தகுந்த மாதிரி பேசுடாங்கறீங்களா. என் கதையைக் கேட்டா. நீங்க அப்படி சொல்ல மாட்டீங்க.

ஆமாங்க. நான் என் தங்கச்சி எங்கம்மா அப்பான்னு. எவ்வளவு அழகான, பாசமான குடும்பம் தெரியுமா எங்களுது.

ஆனா.. ஆனா.. அதெல்லாம்.. ஒரு வருசத்துக்கு முன்னதான்.. இப்ப நான் ஒரு அனாதை."

கோவிலின் சுவரில் தலை சாய்த்து அமர்ந்திருந்த அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

"என்ன அதிர்ச்சியாயிட்டீங்களா. அதுக்கு காரணம்.... அதுக்கு காரணம்.. இது நான் யார்கிட்டயும் சொல்லாம... காலம் முழுக்க என்னோடயே போகனும்னு நினைச்ச இரகசியம். ஆனா இப்ப என்னயும் மீறி இதை என் மனசு யார்கிட்ட சொல்லுதுன்னே தெரியலைங்க எனக்கு."

மீண்டும் அவன் கண்களில் இருந்து நீர் துளிர்த்தது. பின் அவன் மனசு சிறிது நேரம் மெளனமாயிருந்தது.

"என் தங்கச்சிக்கு எட்டு வயசுதான் ஆகுது, ரொம்ப புத்திசாலி நல்லா படிப்பா.. எப்பவும் சுறுசுறுப்பா இருப்பா.. எங்க தெருவுக்கே செல்லக் குழந்தையா இருந்தா. அந்த தங்கச்சி திடீர்னு காணாம போயிட்டா. நாங்க தேடாத இடம் இல்லை. அவ கிடைக்கவே இல்லை. அடுத்த நாளும் நாங்க ஆளுக்கொரு பக்கமா போயி தேட ஆரம்பிச்சோம். தேடிக்கலைச்சு போய் தண்ணி குடிக்கலாம்னு ஆத்தங்கரை பக்கம் போனேன். அங்க ஒரு மூட்டை கரை ஒதுங்கி இருந்தது. எனக்கு மனசுல ஒரு நடுக்கம், சந்தேகம்.

கூடாது.. கூடாது எனக்கு இப்ப தோணின மாதிரி இருந்துடக் கூடாதுன்னு நினைச்சுகிட்டே. அந்த மூட்டையை பிரிச்சு பாக்கறேன்.

ஆ.. அது என் தங்கச்சியோட கொலுசேதான். போன மாசம் என்னோட முதல் சம்பாத்தியத்துல வாங்கிக் கொடுத்த கொலுசு அது. நான் வெள்ளிப் பட்டறைல வேலை செஞ்சேன்.

அவளோட உடம்பு ஒரு லுங்கில சுத்தி இருந்தது. அது அது... எங்க வீட்டு எதிர் வீட்ல குடியிருந்த ஆளோடது. அடிக்கடி அந்த ஆள் அதைக்கட்டி பாத்திருக்கேன். எப்ப பாத்தாலும் அந்தாளும் அவங்க வீட்டு பொம்பளையும் ரோட்டுல தகராறு பண்ணிக்குவாங்க. அப்புறம் அந்தம்மா கிளம்பி எங்கயோ போகும். அப்புறம் வாரம் பத்து நாளுக்கு வராது.

எனக்கு விசயம் என்னன்னு புரிஞ்சுடுச்சு. யாரோ வர்ர அரவம் கேட்டுச்சு. மறுபடியும் அந்த மூட்டையை ஒரு கல்லைப் போட்டு கட்டி நடு ஆறு வரைக்கும் இழுத்துட்டு போயி விட்டுட்டு வந்தேன்.

அப்புறம் எவ்வளவு நேரம் நான் கரைல உக்காந்து அழுதிட்டிருந்தேன்னு தெரியாது. தங்கச்சி நீ திடீர்னு ஆத்துல இருந்து எந்திருச்சி வந்துடும்மான்னு கதறினேன். எதாவது அதிசயம் நடக்கும்னு நம்பினேன்.

ஒரு வாரம் இதை ஜீரனிக்க முடியாத மாதிரி பித்து புடிச்ச மாதிரி திரிஞ்சேன். தேடும் படலம் நடந்துக்கிட்டே இருந்தது. ஒரு நாள் என் நாக்குல சனி உக்காந்திருந்திச்சு போல. எங்கம்மாகிட்ட.. இந்த விசயத்தை சொன்னேன்.

அவங்களும் அப்பாவும் கதறினாங்க துடிச்சாங்க. அவங்களால இதை தாங்கவே முடியலை. ரொம்ப நேரம் அழுதிட்டே இருந்தாங்க. மூனு பேரும் அழுதழுது நான் தூங்கிட்டேன். காலைல எந்திருச்சி பாக்கறேன். எங்கம்மாவும் அப்பாவும்... எங்கம்மாவும் அப்பாவும்...

எங்க வீட்டு உத்தரத்துல தொங்கிக்கிட்டு இருந்தாங்க..."

அந்த கோவிலின் இன்னொரு மூலையில் இருந்த தண்ணீரைப் பிடித்து சிறிது தொண்டையை நனைத்துக் கொண்டான் அவன். பேசுவது மனதாக இருந்தாலும் தொண்டை துக்கத்தால் வரண்டிருந்தது.

"மனிதர்களுக்கு காமம்ங்கறது ஒரு உணர்வு அவ்வளவுதான... தோ நான் இப்ப தாகம் எடுக்குதுன்னு தண்ணி குடிச்சனே அது மாதிரிதான. தாகம் எடுத்ததுன்னா தண்ணியதான குடிப்போம். வேற எதாவது கழிவுப் பொருளை குடிச்சிருவமா. அந்த ஆளோட காமத்தை வெளிப்படுத்த ஒரு பச்சை மண்ணுதான் கிடைச்சுதா"

கண்களில் நீர் பொலபொலவென கொட்டியது. அவனது உடல் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது.

"இந்த ஆளோட காமத்துக்கு எங்க குடும்பமே பலி ஆயிடுச்சே. இதெல்லாம் வெளியே சொல்ற விசயமா. அப்படி சொல்லிட்டா.. என் தங்கச்சி...

என் தங்கச்சி... ஆத்மா எப்படி தவிக்கும். இப்படி மானம் போயிடுச்சேன்னு. அதான் மனசைக் கல்லாக்கிக்கிட்டு அந்தக் கல்லைதான் அவளுக்கு துணையா அந்த மூட்டைக்குள்ள போட்டு நடு ஆத்துக்கு இழுத்துட்டு போய் விட்டுட்டு வந்தேன். இன்னமும் அந்த ஆத்துக்கு அடில என் தங்கச்சி தூங்கிட்டு இருக்கா.

சமயம் பாத்துட்டே இருந்தேன் அந்தாளைப் பழிவாங்க.. இதோ இன்னிக்கு காலைல இன்னொரு கல்ல அந்தாள் தலைல போட்டேன்."

அவன் மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

"சொல்லுங்க.. காமம்ங்கறது உயிர்களை உருவாக்குவதற்காகவா? இல்லை உயிர்களை அழிப்பதற்காகவா?" என்றவாரே.. அருகில் இருந்த கோவில் கிணற்றில் குதித்தான் அவன்.

உண்மை மூழ்கிக்கொண்டிருந்தது.

SHUTTER ISLAND (2010) - திரை விமர்சனம்

SHUTTER ISLAND (2010)

இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காகவும், இது ஒரு திரில்லர் திரைப்படம் என்பதனாலும் இதனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. நேற்றுதான் நேரம் கிடைத்தது.

1954 ஆம் ஆண்டில் படம் தொடங்குகிறது...

இரண்டு மார்ஷல்கள்  ஷட்டர் ஐலேண்டில் இருக்கும் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற ஒரு நோயாளியைக் கண்டுபிடிப்பதற்காக கப்பலில் பயணிக்கிறார்கள். அதில் ஒருவர்தான் டிகாப்ரியோ.

மிகவும் அபாயகரமான நோயாளிகள் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை அது. அந்த தீவிலேயே அந்த மருத்துவமனை மட்டும்தான் இருக்கிறது. அங்கு இந்த மார்ஷல்களை அவர்கள் நடத்தும் விதம் அங்கு இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை.. டீகாப்ரியோவிற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

காணாமல் போனதாகச் சொல்லப்படும் நோயாளி ரேச்சல் சொலாண்டோ ஒரு பெண். அவள் அவளது மூன்று குழந்தைகளைக் கொன்ற ஒரு சைக்கோ என்கிறார்கள்.

அந்த விசாரனையின் போதே டிகாப்ரியோவுக்கும் தலை சுற்றுகிறது.. அதற்காக அவனுக்கு அங்கு மருந்து தரப்படுகிறது.

ரேச்சலுக்கு பழகும் சந்தர்ப்பம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பவர்களிடம் எல்லாம் ஆண்ட்ரூ லாடிஸ் என்ற பெயரை உச்சரித்து அவரைத் தெரியுமா என்று கேட்கிறார் டீகாப்ரியோ. அந்த பெயரைக் கேட்டவுடன் அனைவரும் அதிர்ந்து எழுந்து பதட்டத்துடன் ஓடாத குறையாக சென்று விடுகின்றனர். நமக்கும் யார் அந்த ஆண்ட்ரூ லாடிஸ் என்ற எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது.

இதனிடையே டீகாப்ரியோவிற்கு அவர் இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற போது நடந்த நிகழ்வுகள் மற்றும் தீவிபத்தில் இறந்த அவனது மனைவி போன்ற சம்பவங்கள் நினைவுகளாகவும், கனவாகவும் வந்து அவஸ்தைப் படுத்துகின்றன.

இறந்த அவரது மனைவி கனவிலும் நினைவிலும் வந்து அடிக்கடி இதைச் செய் இதைச் செய்யாதே என்கிற ரீதியில் எதையாவது சொல்கிறார். அதனாலும் டீகாப்ரியோ குழம்புகிறார்.

தன் மனைவி இறந்ததற்கு காரணம் ஆண்ட்ரூ லாடிஸ்தான். அவர் தற்போது இந்த மருத்துவமனையில்தான் இருக்கிறார். மேலும் இந்த மருத்துவமனையில் நிறைய சித்திரவதைகள் நடக்கின்றன அதனைக் கண்டுபிடித்து உலகிற்குச் சொல்வதற்காகவே தான் இங்கு வந்திருப்பதாக தன் உடன் வந்த மார்ஷலிடம் டீகாப்ரியோ தெரிவிக்கிறார்.

ரேச்சலின் அறையில் ஒரு துண்டுச் சீட்டு அவர்களுக்குக் கிடைக்கிறது. அதில் யார் அந்த 67 ஆம் நபர்? என்ற கேள்வி இருக்கிறது.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.. அது என்னவாக இருக்கும் என நாமும் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.

அந்த மருத்துவமனையில் மொத்தம் இருப்பதே 66 நோயாளிகள்தான் என்ற உண்மை டீகாப்ரியோவிற்கு தெரியவருகிறது. அப்படியானால் 67 வதாக ஒரு நோயாளி நிச்சயம் இங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கிறார் டீகாப்ரியோ. அந்த 67 வது நோயாளி யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்கும் எகிறிவிடுகிறது. ஆனால் இறுதியில் அந்த 67 வது நோயாளி யார் எனத் தெரியவரும் போது.. உண்மையில் நாமும் சிறிது குழம்பி பின் தெளிந்து அதிர்ந்து போகிறோம்.

இந்த விசாரணையின் போதே திடீரென காணாமல் போன ரேச்சல் கிடைத்து விட்டார் என்று அவரை டீகாப்ரியோவிற்கு அறிமுகப்படுத்துகின்றனர். அவர் தான் மருத்துவமனையில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் வீட்டில் இருக்கிறோம். உடன் இருப்பவர்கள் அனைவரும் அவரது சேவகர்கள் என்ற நினைப்பில் இருக்கிறார்.

டீகாப்ரியோவிடம் அவரது நினைவுகளை அவர் தெரியப்படுத்துகிறார்... பின் திடீரென டீகாப்ரியோவை அவரது கணவராக நினைத்து கட்டி அணைக்கிறார். கட்டி அணைக்கும் போதே திடீரென நினைவு வந்தவராய்.. இறந்த என் கணவர் எரிந்துவிட்டார்.. யாரடா நீ என்று கூச்சல் போடுகிறார். அதிர்ந்து விடுகிறார் டீகாப்ரியோ.. மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது மருந்து தரப்படுகிறது.


அந்த தீவில் ஒரு கலங்கரை விலக்கம் இருக்கிறது. அங்கு என்ன இருக்கிறது.. அங்கு ஏதோ மர்மம் இருப்பதாக டீகாப்ரியோ நினைக்கிறார்.
எப்படியாவது அங்கே சென்று பார்த்துவிட வேண்டும் என அதற்கு திட்டமிடுகிறார்.

அங்கே அவரும் உடன் வந்த மார்ஷலும் செல்கின்றனர். செல்லும் வழியில் டீகாப்ரியோவிற்கும் உடன் வந்த மார்ஷலுக்கும் தகராறு வந்துவிடுகிறது. தான் மட்டும் தனியாக அந்த கலங்கரை விலக்கத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு டீகாப்ரியோ முன்னே நடக்கிறார். பின் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அந்த மார்ஷலைக் காணோம். அந்த மார்ஷலின் பெயர் சக்.. அங்கே சென்று பார்க்கிறார். இந்த சம்பவம் நடப்பது உயரமான ஒரு பாறைக்கு அருகில், கீழே கடல்..

அங்கு சென்று பார்த்தால் சக் கீழே விழுந்து இறந்து கிடக்கிறார். பதறியடித்துக் கொண்டே இவரும் சிரமப்பட்டு பாறைகளைப் பிடித்து கீழே இறங்கிப் பார்த்தால் அவர் அங்கு இல்லை.

என்னடா இதுன்னு டீகாப்ரியோ அதிர்ச்சியோட பாத்துட்டு இருக்கும் போதே.. அங்க ஒரு பொந்தில் இருந்து ஆயிரக்கணக்கான எலிகள் வந்து அவர் நின்னுட்டிருந்த பாறையைச் சூழ்ந்துக்கும்..

வேக வேகமா அவரு மறுபடியும் பாறைல மேல ஏறுனா.. அங்க சின்னதா ஒரு குகை இருக்கும்.. அதுக்குள்ள வெளிச்சமா இருக்கேன்னு உள்ள போய் பார்த்தா... அங்க ரேச்சல் இருப்பாங்க..

என்னடா ரேச்சல்தான் கிடைச்சிட்டாங்களே... மருத்துவமனைக்குள்ள வந்த ரேச்சல் மறுபடியும் இங்க எப்படி வந்தான்னு குழம்பாதீங்க.. மேல படிங்க...

நான்தான் உண்மையான ரேச்சல்னு டீகாப்ரியோகிட்ட சொல்வாங்க அவங்க.. அவங்க மூனு குழந்தைகளைக் கொலை பண்ணினதைப் பத்தி டீகாப்ரியோ கேப்பார். அதுக்கு அவங்க எனக்கு குழந்தைகளே கிடையாது நான் கல்யாணமே பண்ணிக்கலை.. உண்மையில் நான் நோயாளியே கிடையாது... இந்த மருத்துவமனையில் வேலை பார்த்துட்டு இருந்த டாக்டர் நானுன்னு சொல்வாங்க...

அப்புறம் அவங்க டீகாப்ரியோகிட்ட ஒரு கேள்வி கேப்பாங்க. டீகாப்ரியோவுக்கு அதிர்ச்சியா இருக்கும். நமக்கும்தான்.. அவங்க என்ன கேப்பாங்கங்கறதை நீங்க படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கங்க...

அதுமட்டும் இல்லாம அந்த மருத்துவமனையில் மக்களை ஆராய்சிப் பொருளாப் பயன்படுத்தறது பத்தியும் அவங்க மூளையில நடக்கிற அறுவை சிகிச்சை பத்தியும் சொல்வாங்க. இது அங்க இருக்கற எல்லா ஊழியர்களுக்கும் தெரியும்னு சொல்வாங்க. அந்த கலங்கரை விலக்கத்துலதான் மூளை அறுவை சிகிச்சை நடக்குதுன்னும் சொல்வாங்க. டீகாப்ரியோவுக்கு அங்க போகனும்ங்கற எண்ணம் இன்னும் அதிகமாகிடும்.

ஒரு வழியா டீகாப்ரியோ அந்த கலங்கரை விலக்கத்துக்கு போய்டுவார். அங்க போய் பார்த்தா... அங்கே...

இதுக்கப்புறம் நடக்கறது எதையும் நான் சொல்லமாட்டேன்.. நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க.. இதுவரை நான் சொன்ன கதை கதையே இல்லை (அடப்பாவி...அப்ப ஏண்டா இப்படி சுத்துனங்கிறீங்களா..) இனிமேதான் இருக்கு மேட்டரே..

அவரும் அதிர்ச்சியாகி, குழம்பி நாமும் அதிர்ச்சியாகி குழம்பி... நம்ம மூளை அப்படியே டீகாப்ரியா மூளையாவே மாறி யோசிச்சிட்டிருக்கும்.. அந்த அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது...

இந்தப் படம் பார்த்து முடிச்சவுடனே மறுபடியும் பார்க்கத் தோணுச்சு... இரண்டாம் முறை பார்க்கும் போது அது வேற அர்த்தத்தைக் கொடுக்கும்..

மைல்டான திரில்லர் படமான் இதுல இடைல இடைல கொஞ்சம் போரடிக்கற மாதிரி காட்சிகள் இருக்கும்.. ஆனா முதல் முறை பார்க்கும் போதுதான் அந்த சீனெல்லாம் போரடிக்கும். இரண்டாவது முறை பார்க்கும் போது அந்த காட்சியை வெச்சது சரிதான்னு தோணும்..

டீகாப்ரியோவோட நடிப்பு கிளாஸ். வழக்கம் போல இதையும் அவர் நடிப்புக்காக ஆஸ்காருக்கு நாமினேட் பன்னுவாங்க.. பாவம் அவருக்குதான் அந்த ராசி இல்லையே...

கட்டாயம் இரண்டாம் முறை பார்க்க வேண்டிய படம் இது..

Tuesday, October 26, 2010

கண்ணீர் துள்ளல் - சிறுகதை

அந்த உணவகத்தில் மேஜையை ஈரத்துணியால் துடைத்துக் கொண்டிருந்தான் ராஜன்.

"டேய் என்னடா படிக்கற நீ... நீ படிக்கற ஸ்கூல்ல ஃபீஸ் எவ்லோன்னு தெரியும் இல்ல. கூடப்படிக்கறவன்லாம் பத்தாவதுல எவ்லோ மார்க் வாங்கி அங்க சேந்திருக்கான் தெரியும் இல்ல. நல்ல மார்க் எடுத்தாதான்டா அந்த ஸ்கூல்லயே எட்டிப்பாக்க முடியும். பத்தாவதுல உன்னைய பாஸ் பண்ண வைக்க நான் பட்ட பாடு எனக்குத்தான்டா தெரியும். இப்பவாவது பொறுப்பா படிக்க வேண்டியதுதான. பேருக்கு பாஸான உன்னை அந்த ஸ்கூல்ல தொடர்ந்து வெச்சிருக்கறதுக்காகவே, டொனேசன்ங்கற பேர்ல மாசா மாசம் என் வருமானத்துல பாதிய அழுவறன்டா."

தன் மகன் வேலனிடம் பொரிந்துத் தள்ளிக் கொண்டிருந்தார் அந்த உணவகத்தை நடத்தி வரும் சுந்தரம். அவருக்கு அவன் ஒரே மகன். அந்த ஊரிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற உணவகம் அது. நல்ல வருவாய். இருந்தும் என்ன செய்ய?. மகனை நன்றாக படிக்க வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பிப் பார்க்க வேண்டும் என்பது அவரது ஆசை. ஆனால் அவனோ என்ன திட்டினாலும் உதைத்தாலும் நான் படிக்கமாட்டேன் என்றே செயல்பட்டான்.

"சரி இனியும் உன்ன நம்பி உபயோகம் இல்ல. இப்படி என்னால காசு கொண்டு போய் கடல்ல கொட்ற மாதிரி. பலனே இல்லைன்னு தெரிஞ்சும் மாசா மாசம் உன் ஸ்கூல்ல போய் கொட்ட முடியாது. இந்த ராஜனைப் பாரு. படிப்பு வரலைன்ன உடனே நம்ம ரூட் இது இல்லன்னு வேலைக்கு வந்துட்டான். எவ்லோ பொறுப்பா வேலை செய்யற பையன் தெரியுமா. உன் வயசுதான் ஆவுது. இப்பவே எவ்லோ கண்ணும் கருத்துமா இருக்கான். நீயும் இனிமே இங்கயே வந்து வேலை செய்யிடா. அப்பதான் உனக்கு புத்தி வரும்."

இதனை அரசல் புரசலாக கேட்டுக்கொண்டிருந்த ராஜனுக்கு திக்கென்றது. நம்மை நம்ம முதலாளி இப்படி நினைச்சிக்கிட்டிருக்காரோ என்று நினைத்தவன். அடுத்த நொடியே. அடுத்தடுத்த செய்ய வேண்டிய வேலைகள் நினைவு வந்தவனாய் சகஜமாகி அதனைப் பார்க்கப் போனான். 

இச்சம்பவம் நடந்து ஒரு மாதம் சென்றிருக்கும். ஒரு மாலை நேரம்.

அந்த உணவகத்தில் ஒரு டேபிளில் வந்து அமர்ந்தார் அவர்.

எதிரே உள்ளே சென்ற ராஜனை பின்புறமாக பார்த்த அவர். அவன் அக்கடையின் ஊழியன் என்பதைப் புரிந்தவராய்..

"தம்பி. ஒரு காபி. ஒரு பிளேட் வடை கொண்டு வாப்பா"

"சரிங்க சார்" என்றவாரே அவரிடம் திரும்பினான் ராஜன்.

ஒரு நிமிடம் அதிர்ந்தான், பின் மகிழ்ந்தான்.

"சார்.. நீங்களா சார். எப்படி இருக்கீங்க சார். உங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம் சார்."

என்று அவனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு. இது போதாது என்கிற தொனியில் யோசித்து நின்றான்.

"என்னப்பா. இது உங்க கடையா?"

"இல்லை சார்"

"பின்ன வேலை செய்யிறியா. ஏன்பா காலேஜ் சேரலையா. என்ன ஆச்சுப்பா"

அவரது குரலில் பரிதாபமும் அதிர்ச்சியும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.

ராஜன் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தான். எப்போதும் மலர்ந்த முகமாய் இருக்கும் ராஜனின் முகம் இருண்டிருந்தது. கண்களின் ஓரம் கண்ணீர் நான் வரட்டுமா வரட்டுமா என்றது.

அவனது முகவாட்டத்தைப் பார்த்த அவர்..

"தம்பி என்ன ஆச்சுன்னு சொல்லுப்பா.. ஏன் காலேஜ்ல சேரலை நீ. தைரியமா சொல்லுப்பா" என்றார்.

இதனை கவனித்துக் கொண்டிருந்த சுந்தரம் எழுந்து இவர்கள் அருகில் வந்தார்.

"சார் உங்களுக்கு இந்த பையனைத் தெரியுமா. என்ன கேட்டீங்க அவன் கிட்ட? ஏன் அவன் இவ்லோ பதட்டமா இருக்கான்?"

"நான் ஒரு ஆசிரியர். இவன் எங்க ஸ்கூல்லதான் 12 வது வரைக்கும் படிச்சான். 12 வதுல ஸ்கூல்லயே ஃபர்ஸ்ட் வந்த பையன் சார் இவன். இந்நேரம் ஒரு நல்ல காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கும். படிச்சுட்டு இருப்பான். வந்து சொல்லக்கூட இல்லை பாரு. அவ்லோதான் ஸ்டூடண்ட்ஸ்னு நாங்க பேசிட்டு இருந்தோம். இவன் என்னன்னா இங்க வேலை பாத்துட்டு இருக்கான்."

"அப்படீங்களா. நான் இவன் படிப்பேறாத பையன்னு இல்ல நினைச்சுட்டு இருந்தேன். பாருங்க. யாரையும் பாத்தவுடன் நமக்கு என்ன தோணுதோ அப்படிதான் அவங்க இருப்பாங்கன்னு நினைச்சுக்கறோம்." என்றவாரே அவனிடம் திரும்பி..

"தம்பி நீ இனிமே என் கடைக்கு வேலைக்கு வர வேண்டாம்ப்பா"

அந்த ஆசிரியருக்கு திக்கென்றது. அச்சச்சோ அவன் படிப்பில் எப்படி மண் விழுந்ததோ தெரியவில்லை. இப்போது அவன் பிழைப்பிலும் நாமே மண் அள்ளிப் போட்டுவிட்டோமோ என்று தடுமாறினார். திகைத்தார். அடுத்து என்ன பேசுவது என யோசித்தார்.

ராஜனும் அதிர்ச்சியடைந்தவனாய்...

"சார் சார் அப்படி சொல்லாதீங்க சார். என் குடும்பத்துல நான் மட்டும்தான் சார் சம்பாதிக்கறேன். எங்கப்பா குடிச்சி குடிச்சே சமீபத்துல செத்துட்டாரு சார். அவரோட சொற்ப வருமானத்துலதான் சார் குடும்பம் ஓடிட்டு இருந்தது. அம்மாவுக்கு பிரஷர், சுகர்லாம் இருக்கு சார். அதனால் அவங்கள வேலைக்கு போக வேனாம்னு சொல்லிட்டு. நான் மட்டும் இங்க சம்பாதிக்கறேன் சார். இப்ப நீங்களும் என்ன வேலைய விட்டு நிறுத்திட்டா என் குடும்பம் நடுத்தெருவுக்குதான் சார் வரும்"

சொல்லும் போதே அந்த காட்சிகள் அவன் மனக்கண்ணில் ஓடியிருக்க வேண்டும். அவன் கண்ணில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த கண்ணீர் வழிந்தோடியது. உடல் ஏகமாய் நடுங்கியது.

"தம்பி பதறாதப்பா. நீ இனிமே என் கடைக்கு வேலைக்கு வர வேண்டாம். ஆனா உன் படிப்புச் செலவை நான் ஏத்துக்கறேன்பா. நல்லா படிக்கற நீ ஏன் வாழ்க்கையைப் பாழாக்கிக்கனும். நீ சம்பாதிக்க ஆரம்பிக்கற வரைக்கும். உங்க வீட்டுக்கு மாசா மாசம் நான் ஒரு தொகை கொடுக்கறேன்பா." என்றார் சுந்தரம்.

ராஜனின் முகம் குப்பென மலர்ந்தது. மீண்டும் கண்களில் கண்ணீர் துள்ளலுடன் வழிந்து வந்து தரையில் விழுந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

உடனே ஓடிப்போய் அவரது கால்களில் விழுந்தான். பின் ஆசிரியரின் கால்களிலும் விழுந்து கும்பிட்டான். அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடல் நடுக்கம் இன்னும் அதிகரித்திருந்தது. வாழ்வின் மோசமான பக்கங்களையே பார்த்திருந்த அவனது மூளை இதனை நம்ப மறுத்துத் தடுமாறியது.

இதனை உணர்ந்த சுந்தரம்.. அவனை அருகில் அழைத்து கட்டியணைத்து ஆசுவாசப்படுத்தினார். பின் ஆசிரியரிடம்...

"ஏன் சார். உங்க பள்ளியிலேயே முதல் மதிப்பெண் வாங்கிய பையன்கறீங்க. அவனுக்கு கூட அடுத்து என்ன படிக்கனும்னு அக்கறையா அறிவுரை சொல்ல மாட்டீங்களா? குறைந்த பட்சம் அவன் என்ன படிக்கறான்னு கூட தெரிஞ்சுக்க மாட்டீங்களா? பள்ளியோடவே ஆசிரியரோட கடமை முடிஞ்சதுன்னு நினைச்சிட்டீங்களா? அவ்லோதான் ஆசிரியரா?"

ஆசிரியர் புதிய பாடம் கற்றவராய் திகைத்து நின்றார்.

Monday, October 25, 2010

பயணம் - சிறுகதை


 அந்த இரவு நேரத்தில் அந்த அரசுப் பேருந்து தூக்கக் கலக்கத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் தாமோதரனுக்கு அனுபவம் போதவில்லை என்பது அவர் பேருந்தை ஓட்டிய விதத்திலேயே புரிந்து கொண்டார் அனுபவஸ்தரான நடத்துனர் மனோகரன்.

இந்த தம்பிகிட்ட பேச்சு குடுத்துக்கிட்டெ வந்தாதான் வேலையாகும் போல இருக்கே. இல்லன்னா தூங்கிடுவான் போல இருக்கு என்று நினைத்தார். அதனால் அவனிடம் பேச்சு கொடுத்தார்.

"என்னப்பா தாமோதரா இதுவரைக்கும் உன்ன நான் பார்த்ததே இல்லையே. எந்த ஊருப்பா நீயி"

"நாமக்கல் பக்கத்துல ஒரு கிராமம்னே கொஞ்ச வருசம் பிரைவேட்டா ஓட்டினேண்ணே. இப்பதான்னே அரசு வேலை கிடைச்சது"

"அப்படியா ரொம்ப சந்தோசம். என்ன ஒற்றுமை பாத்தியா நமக்குல்ல. எனக்கு இது கடைசி ட்ரிப்புப்பா"

ஓட்டுனர் தாமோதரனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னண்ணே சொல்றீங்க?"

"ஆமாம்பா நான் இன்னையோட ஓய்வு பெற வேண்டியதுப்பா. சாய்ந்தரம் ஃபங்க்சன்லாம் கூட வெச்சிருந்தாங்களே. அப்புறம் இன்னிக்கு இது சிறப்புப் பேருந்துங்கறதால கண்டக்டர் தேடிட்டிருந்தாங்க. நானா விரும்பி வந்துட்டேன். அப்புறம் நாளைல இருந்து எனக்கு இங்க வேலை இல்லை இல்லையா, அதான்"

"அப்படிங்களான்னே ரொம்ப சந்தோசம்னே. உங்களுக்கு எத்தனை குழந்தைங்கன்னே"

"எனக்கு ஒரே பொண்ணுப்பா அவளுக்கும் இப்ப தேவை நடக்கப்போகுது. எனக்கு ரொம்ப பிடிச்சதே இந்த வேலையும் என் பொண்ணும் தாம்பா. இதோ இன்னியோட இதுவும் முடிஞ்சுடும். அப்புறம் அவளும் கல்யாணமாகிப் போயிட்டா... நினைக்கவே  கஷ்டமா இருக்குப்பா"

சிறிது நேரம் அங்கு மவுனம் நிலவியது.

என்ன இது இவனிடம் பேச்சுக் கொடுக்க நினைத்து நம்ம சொந்தப் புலம்பலை ஆரம்பித்து விட்டோமே. என்று சுதாரித்தவராய் பேச்சை வேறு திசையில் திருப்பினார். பேச்சு எங்கெங்கோ சென்றது.. பேருந்தைப் போலவே...


* * *

பிரவீனும் சிவாவும் அந்த அரசு விரைவுப் பேருந்தில் அமர்ந்திருந்தனர். பேருந்து அசுர வேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.

"நான் இப்ப இருக்கற சந்தோசத்துக்கு அளவே இல்லடா மச்சான். எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா"

என்று தன் குதூகலத்தை பிரவீனிடம் வெளிப்படுத்தினான் சிவா.

"மச்சி இதையே நீ நூறாவது தடவையா சொல்றடா. வேலை கிடைச்சிருக்கறது சந்தோசமான விசயம்தான். இப்பதான படிச்சி முடிச்சிருக்கோம். இப்ப ஃபீல்டும் ரொம்ப நல்லா இருக்கு. இந்த வேலை கிடைக்கலைன்னாலும் வேற வேலை சீக்கிரம் கிடைச்சிருக்கும்டா மச்சி. நீ ஏன் இவ்ளோ எக்சைட் ஆகறேன்னு புரியலைடா மச்சி"

"அப்படி இல்லடா. உங்கப்பா பெரிய பிசினஸ் மேன். உனக்கு காசு சம்பாதிக்கனும்ங்கற நெசசிட்டி இல்லை. அதாண்டா உனக்கு அருமை தெரியலை. ஆனா நான் அப்படி இல்லைடா. என்ன படிக்க வைக்கிறதுக்காக எங்க குடும்பமே சேர்ந்து கஸ்டப்பட்டதுடா. அப்பா கூலி வேலைதான். யாரையாவது ஒருத்தரைத்தான் படிக்க வைக்க முடியும்னு சொல்லிட்டார். அதனால எங்கக்காங்க மூனு பேரும் படிப்பை பாதிலயே நிறுத்திட்டு அவங்களுக் கூலி வேலைக்கு போனாங்கடா. இனி நான் தலையெடுத்துதான் அவங்களுக்கு கல்யாணம் காச்சின்னு பண்ணனும்.  இப்ப கூட பாரு. வேலைக்கு நீ முயற்சியே பண்ணலைன்னாலும் சும்மா பெங்களூர சுத்திப் பாக்கனும்னு எங்கூட கிளம்பிட்ட. எங்க ஊர்ல இருந்து திருச்சிக்கே நான் நாலைஞ்சு தடவைதாண்டா வந்திருப்பேன். ஆனா எனக்கு பெங்களூரெல்லாம். ஃபாரின் மாதிரிடா. நீ கூட வரலைன்னா. நான் பயந்து நடுங்கிட்டே இருந்திருப்பேன்டா."

"ஹ ஹ ஹ... சரி அதைவிடு. அக்காங்க கல்யாணத்தை எல்லாம் ஜாம் ஜாம்னு நடத்திடலாம்டா அதான் இப்ப சூப்பர் சேலரில வேலை கிடைச்சிடுச்சே. உனக்கு இனி கவலையே இல்லைடா"

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே "பட்டீர்" என்று ஒரு வெடிச்சத்தம் கேட்டது. அந்த அரசு விரைவுப் பேருந்தின் ஓட்டுனர் சற்று நிலை தடுமாறி, பின் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். உடனே நடத்துனர் இறங்கி என்ன ஆச்சு என்று பார்க்கச் சென்றார்.

"அண்ணே டயர் வெடிச்சிடுச்சிண்ணே" -நடத்துனர்.

ஓட்டுனரும் இறங்கி சென்று பார்த்தார்.

பின் இருவரும் அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

பின் பேருந்துக்குள் ஏறி...

"பஸ் டயர் வெடிச்சிடுச்சி மாற்று இல்ல இப்ப. வேற பஸ் மாத்திவிடறோம் எல்லோரும் எந்துரிச்சி வாங்க" என்று நடத்துனர் கத்தினார்.

அந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்த 34 பயணிகளும் தூக்கம் கலைந்த கடுப்பிலும். வேறு பஸ்ஸில் மாற்றிவிட்டால் நின்று கொண்டு பயணிக்க வேண்டி இருக்குமோ என்று கடுப்பிலும் முணுமுணுத்தனர்.

"சீக்கிரம் இறங்கி வாங்க. எங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும் இப்படி ஆகும்னு. இறங்குங்க இறங்குங்க" என்றவாரே. கீழே சென்று நின்று கொண்டார் நடத்துனர்.

பின்னர் வந்த அரசுப்பேருந்துகளில் அவர்களை ஏற்றிவிடும் பணியில் துரிதமாக ஈடுபட்டார். ஒரு வழியாக இரண்டு பேருந்துகளில் முடிந்த அளவு பயணிகளை ஏற்றி அனுப்பியாயிற்று இன்னும் சொற்ப பயணிகளே நின்று கொண்டிருந்தனர். அடுத்து ஒரு பேருந்து வந்தது. அதிலும் நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டியதாய் இருந்தது. முதலில் முரண்டு பிடித்த சிலர் இனியும் அமர்ந்துதான் செல்வேன் என முரண்டு பிடித்து கீழே நிற்கும் கொடுமைக்கு பஸ்ஸிலேயே நின்று தொலைத்துவிடலாம் என பஸ்ஸில் ஏறினர்.

"ஏய் பிரவீன். வாடா நாமளும் போலாம்டா. இன்னும் மூனு மணி நேரம் தாண்டா அப்புறம் சேலம் போய் வேற பஸ் பிடிச்சுக்கலாம்டா" - சிவா.

"ஏய் போடா இன்னும் மூனு மணி நேரம் நின்னுகிட்டே டிராவல் பண்ணனுமா என்னால முடியாதுடா. நான் உக்காந்துதான் வருவேன்"

"தம்பி முரண்டு பிடிக்காதப்பா. எல்லாரும் கிளம்பிட்டாங்க. உங்க நாலு பேத்தோடதான் ஒரே ரோதனையா போச்சு." இவனுடன் சேர்த்து உக்காந்துதான் பயணிப்போம் என்று முரண்டு பிடித்த நால்வரையும் சேர்த்தே திட்டினார் நடத்துனர்.

அந்தப் பேருந்தும் கிளம்பியது. பிரவீன், சிவா மற்றும் இன்னும் இருவர் மட்டும் உட்கார்ந்து போனால்தான் ஆச்சு என்று நின்று கொண்டிந்தனர். சிவா எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் பிரவீன் மசிவதாயில்லை.

நால்வரும் அந்த விரைவுப் பேருந்தின் பின்னால் அடுத்த பேருந்து வருகிறதா என பார்த்துக் கொண்டு சோர்வுடன் நின்றிருந்தனர். அது ஒரு வளைவுப்பகுதியாக இருந்ததால் லைட் வெளிச்சம் மட்டுமே தெரிந்தது.. வருவது பேருந்துதானா என பக்கத்தில் வந்தால் மட்டுமே தெரிந்தது. நடத்துனரும் ஓட்டுனரும் அருகில் இருந்த டீ கடையில் புகுந்து தம் அடித்துக் கொண்டிருந்தனர்.

"சே யார் மூஞ்சில முழிச்சமோ சரியான சாவு கிராக்கிகளா இருக்கானுங்...."

சட்டீர் என பெருத்த சப்தம் கூடவே ஆ..... அம்மா.... என அலறல் கேட்டது.. பதறியடித்துக் கொண்டு அவர்கள் திரும்பிப் பார்த்தனர். அங்கே....

அந்த அரசு விரைவுப் பேருந்து அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் சாய்ந்து கொண்டிருந்தது. ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் உடைந்து அதனையும் தாண்டிக்கொண்டு ஒரு அரசுப் பேருந்து அசுர வேகத்தில் 200 அடி சென்று நின்றது.   

திடீரென அங்கே கூட்டம் கூடியது. ஆ அம்மா என அலறல்கள்...கதறல்கள்.... சிறிது நேரத்தில் போலீஸ் வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்தன.

அடுத்த நாள் காலை செய்தித்தாளில்.

அரசு விரைவுப் பேருந்து மீது அரசுப் பேருந்து மோதல் 7 பேர் உடல் நசுங்கி பலி, 13 பேர் படுகாயம்.
என்ற தலைப்பில் இது தலைப்புச் செய்தியாயிருந்தது. இரண்டாம் பக்கத்தில் இறந்தவர்கள் விவரம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

1. கிருஷ்ணன் (36), நெல்லையைச் சேர்ந்தவர்.
2. கலாநிதி (65), மதுரை பாலாஜி நகரைச் சேர்ந்தவர்.
3. பிரவீன் (21), திருச்சியைச் சேர்ந்தவர்.
4. சிவா (21), திருச்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் (முழு விவரம் தெரியவில்லை).

(இவர்கள் நாலு பேரும் அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்து டயர் வெடித்ததால் மற்றொரு வாகனத்திற்காக சாலையோரம் காத்திருந்த பயணிகளாவர்.)

5. ராமநாதன் (56), சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர்.
6. தமிழ்வாணன் (55), சென்னையைச் சேர்ந்தவர்.
7. மனோகரன் (58), அரசுப் பேருந்தின் நடத்துனர்.

இதில் மனோகரன் நேற்றுதான் பணி ஓய்வு பெற்றிருந்தார். இவராகவே விருப்பத்தின் பேரில். இறுதியாக ஒரு முறை செல்கிறேன் என்று பணிக்கு வந்திருக்கிறார். விதி அவருடைய வாழ்வில் விளையாடிவிட்டது இதுவே அவரது இறுதிப் பயணம் ஆகிவிட்டது. மேலும் அரசு விரைவுப் பேருந்து பழுதானதால் மற்ற பயணிகள் நின்று கொண்டு சென்றாலும் பரவாயில்லை என்று சென்றுவிட்டனர். இவர்கள் நால்வரும் உட்கார்ந்துதான் பயணிப்போம் என்று பிடிவாதமாக நின்று கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

***

ஆத்திரத்துடன் செய்தித்தாளை விட்டெறிந்தேன்.

"ஏன் என்ன ஆச்சு மச்சி" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் என் அறைத்தோழன்.

"பேப்பர் நியூஸ் பாத்தியா?"

உடனே புரிந்து கொண்டு..

"ம்" என்றான்.

"வாழ்க்கை.. கனவுகள் நிறைந்தது இல்லையா. அவர்களுக்கும் ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும். கன நேர பிடிவாதத்திற்கும். தான் செய்த பணியை இறுதியாய் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கும் விலை அவர்களது உயிரா?"

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான் என் நண்பன். நீங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்.