Search This Blog

Friday, July 23, 2010

தில்லாலங்கடி திரை விமர்சனம்


பேராண்மை திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மெருகேறிய ஜெயம் ரவி, ரீமேக்தான் என்றாலும் தொடர்ந்து எண்டெர்டெய்ன்மெண்ட் + நெகிழ்ச்சியான காட்சிகள் என்று ஹிட் அடிக்கும் அவரது அண்ணன் ராஜா. இருவரும் மீண்டும் சேர்ந்திருப்பதால். நிச்சயம் இந்தப் படமும் நல்ல எண்டெர்டெய்னராக இருக்கும் என்ற நம்பிக்கையில் முதல் நாளே இதனைப் பார்த்தேன்..ஆனால்!!!

கதை! ரொம்ப சிம்பிள்ங்க....நம்ம ஹீரோ கிருஷ்ணா (ஜெயம் ரவி) எதைச் செய்தாலும் அதில் கிக் இருக்க வேண்டும் என்று விரும்பி ஏடாகூடமாக எதையாவது (உண்மையிலேயே என்ன செய்வது என்று தெரியாமல் எதையாவதுதான் செய்கிறார்....ஏன் ரவி ஏன்) செய்யும் ஆள். ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் காதல் ஜோடியை அந்தப் பெண்ணின் தாயாரிடம் (நளினி) போட்டுக்கொடுத்து...சிறிது அலைக்கழித்து பின் திருமணம் செய்து வைப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது அவரது தில்லாலங்கடி. நளினியும் எம்.எல்.ஏவான என்னையே ரோடு ரோடா திரிய வைச்சிட்ட இல்ல...உன்னை என் காலடில விழ வைக்கிறேன் பார் என்று சவால் விடுகிறார். ஆனால் அதற்குப் பிறகு கடைசி காட்சிக்கு முன்பு வரை அவர் ஆளையே காணோம்.

ஒரு கட்டத்தில் அவர் நினைத்த கிக், பெரும் பணத்தை கொள்ளை அடித்து ஏழைக்குழந்தைகளுக்கு உதவுவதற்காக செலவழிப்பதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து திருடனாகிறார். அவரைப் பிடிக்கத் துரத்தும் போலீஸாக ஷாம். இதுதான் கதை.

தமனாவுக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே ஏற்படும் காதலில் (அதைக் காதல் என்று சொன்னால்..மலேசியா முருகனே வந்து என் கண்ணைக் குத்திடுவார்னு நினைக்கிறேன்.....), பிரிவில் மீண்டும் காதலிப்பதில் எந்த அழுத்தமும், எதார்த்தமும்...அட எந்த கருமமும் இல்லைங்க...(கருமம் பிடிச்ச லவ் என்று ஜெயம் ரவி சொல்லிவிடுவதால்தான் அவர்கள் பிரிவார்கள்).

வடிவேலு மட்டும் சிறிது நேரம் சிரிக்க வைக்கிறார்...மீதி நேரம்.......என்ன செய்வது என்றே தெரியாமல் முழிக்கிறார். சந்தானம், கஞ்சா கருப்பு, மயில்சாமி..இன்னபிற காமெடியன்கள் எல்லோரும்..உள்ளேன் ஐயா..அவ்வளவே..அதற்கு மேல் அவர்களுக்கு வேலை இல்லை...

ரவியின் அப்பா அம்மாவாக பிரபுவும் சுஹாசினியும்.....பாவம் இப்படி ஒரு அப்பா அம்மாவாக இருப்போம் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.

ஜெயம் ராஜா படம் என்றால் குடும்பத்துடன் தைரியமாக பார்க்கலாம் என்று நம்பி இருந்தேன் இந்த படத்தில் அதற்கும் மண்....ஜெயம் ரவி தமனாவின் வயிற்றில் கை வைத்திருக்கிறார்...இதனால் மூடாகிவிடும் தமனா கையை எடுக்கச் சொல்லி ஒரு மாதிரியாகக் கேட்கிறார்...நம்ம ஹீரோ எடுக்கலைன்னா என்ன பண்ணுவே என்று கேட்கிறார்...அதற்கு ஹீரோயின் பண்ணும் காரியம். தவிர்த்திருக்கலாம். 

படத்தின் இறுதி 20 நிமிடங்களில் சுத்த ஆரம்பிக்கிறார்கள்.....ம்....என்ன சொல்றீங்க...நீங்க சொல்றது என்னன்னு எனக்குக் கேக்கலை...மீதி விமர்சனத்தையும் முடிச்சிடறேன்...அப்புறம் கேக்கறேன் உங்க கிட்ட...என்னன்னு.....

தன் மகளை ஒரு டிரைவருக்குக் கட்டி வைத்தவன் மீண்டும் வந்து அந்த எம்.எல்.ஏவைச் சந்தித்து 10 இலட்சம் பணம் கேட்கிறான். அந்த எம்.எல்.ஏவும் நான் உன்னை என் காலடியில் விழவைக்கிறேன் என்று சவால் விட்டேன். நான் பணம் கொடுப்பேன் என்று எப்படி நம்பி இங்கு வந்தாய் என்று கேட்கிறார். உடனே நம்ம ஹீரோ அந்த அம்மா கால்ல விழுந்துடறார். அவங்களும் உடனே மறுபேச்சின்றி 10 இலட்சம் எடுத்துக் கொடுத்துவிடுகிறார். முடியலைடா சாமி!

மலேசியாவில் ஜெயம் ரவிதான் திருடன் என்பதை ஷாம் கண்டுபிடித்துவிடுகிறார்..அப்புறம் எப்படி அவர் இந்தியா தப்பிவருகிறார்...(தப்பிவருகிறார் என்று தப்பா சொல்லிட்டேன்..படத்தில் அவர் இந்தியா திரும்பி வந்து தோல்வியைக் கொண்டாடி சரக்கடித்துவிட்டு பாட்டுப்பாடிக் கொண்டிருப்பார்). இந்தியா என்ன மலேசியாவின் பக்கத்து கிராமமா போர்வையப் போத்திக்கிட்டு கமுக்கமா இருட்டோட நடந்து போயிடறதுக்கு...

ஷாம் நடுரோட்டில் ஹீரோவைச் சுடுவதற்காக குறிபார்த்து ட்ரிக்கரை சுண்டும் இறுதி நிமிடங்களில் இரண்டு சாலைகளில் இருந்தும் நம்ம ஹீரோவை மறைத்தபடி பள்ளிக் குழந்தைகள் ஊர்வலம் வருகின்றனர். நான் குழந்தையா இருக்கும் போது இருந்து இந்த சீன நிறைய படத்துல பாத்துட்டேன் பாசு...ஊர்வலம் வந்த குழந்தைங்க பெருசானதுக்கு அப்புறமாவது..தயவு செஞ்சு இந்த மாதிரி சீனெல்லாம் விட்டுடுங்க..தாங்கலை. ஏழைக் குழந்தைகளுக்காக ஒருத்தர் கோடிக்கணக்குல பணம் கொடுக்கறாரு (வேற யாரு நம்ம ஹீரோதான் அதுன்னு இப்ப படம் பாக்க ஆரம்பிக்கிற சிறுவர்களுக்கு கூட தெரியும்), இன்னும் கொடுப்பாரு..அவருக்கு நன்றி தெரிவிச்சு..எல்லா ஸ்கூல் குழந்தைகளையும் ஊர்வலமா கூட்டிட்டு வர்றோம்னு ஒரு டீச்சர் சொல்வாங்க..இத்தனை குழந்தைகளை வைத்து நகரில் ஒரு ஊர்வலம் நடக்குது...போலீசா இருக்குற ஷாமுக்கு இது பத்தி முன்கூட்டியே எதுவும் தெரியாதாம்.

கடைசி காட்சி இன்னும் பிரமாதம்...தேர்தல் நிதி குவித்து வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்துக்குள் கிட்டத்தட்ட 100, 200 போலீஸ்காரர்கள் காவல் காத்துக்கொண்டிருக்க நம்ம ஹீரோ ஒரே நிமிடத்தில் பலகோடிகளைத் திருடுகிறார்...எப்படி....ரொம்ப சிம்பிள்ங்க...அது...

நம்ம ஹீரோ ஒரு கார் எடுத்துக்கிட்டு அந்தக் கட்டிடத்துக்குப் போவாருங்க...அங்க வழி நெடுக காவலுக்கு இருக்கற போலீஸ்காரங்க...ஸ்கூல் ஃபங்க்சன்ல பிரபலங்கள் யாராவது வந்தாங்கன்னா ரெண்டு சைடும் ஸ்டூடன்ஸ நிக்க வைச்சிருப்பாங்களே..அப்படி பொட்டாட்டாம் லைன் கட்டி ஆடாம அசையாம நின்னுட்டிருக்காங்க....கார்ல வந்த நம்ம ஹீரோ கரெக்டா பணத்தைக் கொட்டி வெச்சிருக்கற அறையோட வெளிப்புறச் சுவர்ல போய் இடிப்பாரு...தப்பு தப்பு..வெளிப்புறச்சுவர் வழியா காரை உள்ளக் கொண்டு வந்திடுவாரு....சூப்பர் சீன் இல்ல...அங்க அமைச்சர் பெருமக்கள்..போலீஸ் மற்றும் நம்ம ஹீரோவோடவே வந்த போலீஸ் ஷாம் எல்லாரும் இருப்பாங்க...அவங்களுக்கெல்லாம்...புகை மண்டலத்துல என்ன நடக்குதுன்னே தெரியாது..ஆனா நம்ம ஹீரோ கரெக்டா பணத்தை லவட்டிக்கிட்டு வெளியே போய்டுவார்...வெளியன்னா ரொம்ப வெளியன்னு நினைச்சுடாதிங்க..ஜஸ்ட் அவர் உடைச்ச சுவருக்கு வெளியதான்...அங்க அவரோட ஆட்கள் இன்னொரு வண்டியோட ரெடியா இருப்பாங்க...அவங்க எப்படி வந்தாங்க...வரிசை கட்டி வந்த போலீஸ்லாம் அவங்களை எப்படி அனுமதிச்சாங்க....பணத்தை எடுத்துக்கிட்டு அவங்க தப்பிச்சு போனதும் போலீஸ் அவங்களைத் துரத்திப் பிடிக்கலையா....இந்தக் கேள்வி எல்லாம் நீங்க கேக்கக் கூடாது. இவ்லோ நேரம் கதை கேட்டுட்டு என்ன கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க ஆமாம்....

படத்தோட கிளைமேக்ஸ்தான் உச்சபட்ச காமெடி....தன்னோட காதலி ஆசைப்பட்டாங்கறதுக்காக நம்ம ஹீரோ திருட்டுக்கு நடுவுல சின்சியரா படிச்சி போலீஸ் ஆயிடறாரு. அப்புறம் ஜெயம் ரவியைப் புடிக்க ஜெயம் ரவியையே அப்பாயிண்ட் பண்ணிடறாங்க....இந்தப் படத்துல வடிவேல் ஒரு வசனம் பேசுவார்...எப்பவும் நான் அடிவாங்குவேன்..இதென்ன இவன் (மன்சூர் அலிகான்) நம்ம அடியப்பூறாம் வாங்கிட்டுப் போயிடறானேம்பார்...ஆனா படம் முடியும்போதுதான் புரியும்...உண்மைல அடிவாங்குனது மன்சூர் அலிகான் இல்லை..நாமதான்னு....

காதுல சுத்தன மொத்த பூவையும் உருவி எடுத்துட்டேன்...இப்ப கேளுங்க நீங்க என்ன கேட்டிங்க..காதுல நிறைய பூ சுத்திருந்ததால நீங்க கேட்டது காதுல விழல...கடைசியா நீ என்ன சொல்ல வர்றேன்னு கேக்கறீங்களா.....

படத்துக்கு கிக்கோ கிக்னு கேப்சன் போடுவாங்க...அடிக்கடி படத்துலயும் சொல்வாங்க..ஆனா அது கிக்கோ கிக் இல்லைங்க..மொக்கையோ மொக்கை...

இடைவேளைக்கு அப்புறம் கேம் ஸ்டார்ட்ஸ் நவ்னு அடிக்கடி சொல்றாங்க... கடைசியா நம்ம வடிவேலும் சொல்வார்..அவர் ஸ்டைல்லயே சொல்லப்போனா..

கேம் ஸ்டார்ட்ஸ் அவ்வ்வ்வ்வ்............


7 comments:

  1. படத்துல கேனத்தனமா பல காட்சிகள் இருப்பது உண்மைதான்,ஆனா ரொம்ப இறக்கீட்டீங்க

    ReplyDelete
  2. நீங்க சொல்றது சரிங்கண்ணா...நானும் முதல் நாள் போய்ப் பார்த்தேன்..கொஞ்ச நேரம் நல்ல இருந்துச்சு அதுக்கு அப்புறம் செம போர்..

    ReplyDelete
  3. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சி.பி. செந்தில் குமார் & தீபன். படத்து மேல அவ்வளோ நம்பிக்கை இருந்தது எனக்கு...இவங்க படம் எப்படியும் நல்லா இருக்கும்னு நம்பினேன்...ஆனா....ஏமாற்றம்தான்...

    ReplyDelete
  4. ஆமாம் மகேஷ் நான் சேலம் தான்.. 4 ரோட்ஸ்ல இருக்கேன்.. நீங்களும் சேலமா.. எந்த ஏரியா?

    ReplyDelete
  5. இன்னும் படம் பாக்கல,பாக்கவும் போறதில்ல

    விமர்சனத்திற்கு நன்றி

    ReplyDelete
  6. Hi Ramesh,,

    Salem four roads yeah,,very happy,,I am from Namakkal(living in chennai),,
    Red in KSR,,

    Very happy to meet you in blog,,I didn't have capability of writing continuously ..

    ReplyDelete